முகப்பு


964. கருணை நினைந்து மொழிகள் மறந்து
கருணை நினைந்து மொழிகள் மறந்து
பாடினோம் நன்றி நன்றியே
தனிமை களைந்து உறவில் மகிழ்ந்து
கூடினோம் நன்றி நன்றியே
நெஞ்சம் சொல்லும் நன்றியே
என்றும் சொல்லும் நன்றியே

1. பசும்புல் வெளியில் பசியைத் தீர்த்த
ஆயன் ஆனதால் நன்றி -5 இயேசுவே
பாலை வழியில் தாகம் தீர்த்த
நேயன் ஆனதால் நன்றி - 5 இயேசுவே
நீதி நெறியில் நடத்திச் செல்லும் தோழன் ஆனதால் - 2
குறையில்லை துயரில்லை எந்தன் வாழ்விலே - 2
சாவின் இருளின் பள்ளத்தாக்கில் நடக்க நேரினும்
துன்பச் சூழலில் வாழ்க்கைக் கடலைக் கடக்க நேரினும்
அச்சமில்லையே ஆயன் நீ இருப்பதால் - நெஞ்சம்

2. எந்தன் தலையில் நறுமணத்தின் தைலம் தந்ததால்
நன்றி - 5 இயேசுவே
எந்தன் கிண்ணம் மகிழ்ச்சியினால் நிரம்பச் செய்ததால்
நன்றி - 5 இயேசுவே
உன் அருளும் பேரன்பும் என்னைச் சூழ்வதால் - 2
நெடுநாள் உம் இல்லத்தில் வாழ்ந்திருப்பேன் நான் - 2 சாவின்