977. நன்றி என்றும் பாடுவேன் என் இனிய தேவனே
நன்றி என்றும் பாடுவேன் என் இனிய தேவனே
நன்மை செயல்கள் செய்த உந்தன் அன்பைப் பாடியே - 2
கோடி நன்றிப் பாட்டுப் பாடுவேன்
காலமெல்லாம் வாழ்த்துக் கூறுவேன் - 2
1. உயிர்கள் யாவும் வாழ நல்உலகைப் படைத்ததால்
உறவு வாழ்வு வளர நல்உள்ளம் உறைந்ததால்
நிசங்கள் யாவும் நிலைக்க நற்செய்தி தந்ததால்
நிழல்கள் துன்பம் மறைய திருவிருந்தை அளித்ததால்
பகிர்ந்து வாழ்வில் வளர நல்மனத்தைக் கொடுத்ததால்
பரமன் அன்பில் வாழ அருள்வரங்கள் பொழிந்ததால் - 2
2. பகிர்ந்து வாழும் அன்பு வாழ்வில் என்னைச் சேர்த்ததால்
செபித்து நின்று வேண்டும்போது என்னைக் காப்பதால்
நேசக்கரத்தை நீட்டி வந்து நன்மை செய்வதால்
துன்ப துயரைப் பனியைப் போல விலக வைப்பதால்
உண்மை அன்பில் உள்ளம் மகிழத் தந்ததால்
உந்தன் ஒளியே உலகில் எந்தன் வழியாய் ஆனதால் - 2
நன்மை செயல்கள் செய்த உந்தன் அன்பைப் பாடியே - 2
கோடி நன்றிப் பாட்டுப் பாடுவேன்
காலமெல்லாம் வாழ்த்துக் கூறுவேன் - 2
1. உயிர்கள் யாவும் வாழ நல்உலகைப் படைத்ததால்
உறவு வாழ்வு வளர நல்உள்ளம் உறைந்ததால்
நிசங்கள் யாவும் நிலைக்க நற்செய்தி தந்ததால்
நிழல்கள் துன்பம் மறைய திருவிருந்தை அளித்ததால்
பகிர்ந்து வாழ்வில் வளர நல்மனத்தைக் கொடுத்ததால்
பரமன் அன்பில் வாழ அருள்வரங்கள் பொழிந்ததால் - 2
2. பகிர்ந்து வாழும் அன்பு வாழ்வில் என்னைச் சேர்த்ததால்
செபித்து நின்று வேண்டும்போது என்னைக் காப்பதால்
நேசக்கரத்தை நீட்டி வந்து நன்மை செய்வதால்
துன்ப துயரைப் பனியைப் போல விலக வைப்பதால்
உண்மை அன்பில் உள்ளம் மகிழத் தந்ததால்
உந்தன் ஒளியே உலகில் எந்தன் வழியாய் ஆனதால் - 2