முகப்பு


978. நன்றிகள் பல கூறி நாம் பாடுவோம்
நன்றிகள் பல கூறி நாம் பாடுவோம்
நாளும் நமைக் காக்கும் இறை இயேசுவை - 2
அல்லும் பகலிலும் செல்லும் இடமெங்கும் - 2
அன்னையாய்த் தந்தையாய்
அருகில் இருந்து அணைக்கும் தேவனை

1. கோடி துன்பம் வந்த போதும் கொடிய நோயில் வீழ்ந்த போதும்
தேடிவந்து நம்மைக் காத்திட்டார்
வாடிய மலரைப் போல் வதங்கி வீழ்ந்தாலும் - அன்னையாய்

2. உலகம் நம்மை வெறுத்த போதும் கலகம் நம்மைச் சூழ்ந்த போதும்
விலகவில்லை அன்பர் இயேசுவே
நிலைகள் குலைந்தும் அலையாய் எழுகின்றார் - அன்னையாய்