முகப்பு


981. நன்றி கூறி ஆண்டவரை நாளும் போற்றுவோம்
நன்றி கூறி ஆண்டவரை நாளும் போற்றுவோம்
நாளும் நம்மைக் காத்து வரும் அவரின் அன்புக்காய் - 2
நன்றி இறைவா இறைவா நன்றி நன்றி - 4

1. உயிரையும் தந்தாய் நல்ல உடல்நலம் தந்தாய்
உண்ண உணவும் உடுத்த உடையும் உறைவிடம் தந்தாய் - 2
பாசம் தந்து பரிவு கொண்டு கண்ணைப் போலக் காத்து வந்தாய் - 2

2. தந்தையைத் தந்தாய் அன்புத் தாயைத் தந்தாய்
உற்ற நண்பன் உண்மை சொந்தம் உறவுமே தந்தாய் - 2
உன்னைத் தந்து அன்பைப் பொழிந்து
என்னை என்றும் காத்து நின்றாய் - 2