984. நன்றி சொல்லிப் பாடுவோம் நல்லவரை வாழ்த்துவோம்
நன்றி சொல்லிப் பாடுவோம் நல்லவரை வாழ்த்துவோம்
வல்லவராகுவோம் வளமை காணுவோம் - 2
காலங்கள் நம் கையில் காயங்கள் கரைகையில் - 2
1. மண்ணிலே விண்ணகத்தை மலரச் செய்யும் மனிதராய்க்
கண்ணிலே தீப்பிழம்பைக் கொண்டவர் தாம் கிறித்துவே - 2
ஆணவத்தை அடக்கவே அலையலையாய்ச் செல்லுவோம் - 2
- காலங்கள் நம் கையில்
2. சாதிகள் பேதங்கள் சந்தி தோறும் மோதல்கள்
சரித்திர நாயகனின் சாட்சியத்தால் சரியுமே - 2
செல்லரிக்கும் சூழலைச் செயல்வழியில் மாற்றுவோம் - 2
- காலங்கள் நம் கையில்
வல்லவராகுவோம் வளமை காணுவோம் - 2
காலங்கள் நம் கையில் காயங்கள் கரைகையில் - 2
1. மண்ணிலே விண்ணகத்தை மலரச் செய்யும் மனிதராய்க்
கண்ணிலே தீப்பிழம்பைக் கொண்டவர் தாம் கிறித்துவே - 2
ஆணவத்தை அடக்கவே அலையலையாய்ச் செல்லுவோம் - 2
- காலங்கள் நம் கையில்
2. சாதிகள் பேதங்கள் சந்தி தோறும் மோதல்கள்
சரித்திர நாயகனின் சாட்சியத்தால் சரியுமே - 2
செல்லரிக்கும் சூழலைச் செயல்வழியில் மாற்றுவோம் - 2
- காலங்கள் நம் கையில்