986. நன்றி சொல்வேன்
நன்றி சொல்வேன் - 2
என்னை மண்ணில் படைத்த இறைவனுக்கே
விண்ணும் மண்ணும் எனக்கென கொடுத்தவர்க்கே
இன்றும் என்றும் நன்றி சொல்வேன் - 2 நான்
1. என்னை விட உலகில் எத்தனை பேர் இருந்தும்
என்னைஅன்பர் கொண்டாரே - 2 இயேசு
வறுமையும் நோயும் வாட்டிடும் உலகில்
வளமையால் நிறைத்தாரே
மகிழ்வுடன் வாழ்ந்திடச் சொன்னாரே
2. இன்னலுற்ற நிலையில் அன்பர் இயேசுவின் அருகில்
வந்து நின்று செபித்தாரே - 2 நம்பி
வல்ல எந்தன் தேவன் எளியேனின் செபத்தை
கனிவுடன் கேட்டாரே
வேண்டுதல் கிடைத்திடச் செய்தாரே
என்னை மண்ணில் படைத்த இறைவனுக்கே
விண்ணும் மண்ணும் எனக்கென கொடுத்தவர்க்கே
இன்றும் என்றும் நன்றி சொல்வேன் - 2 நான்
1. என்னை விட உலகில் எத்தனை பேர் இருந்தும்
என்னைஅன்பர் கொண்டாரே - 2 இயேசு
வறுமையும் நோயும் வாட்டிடும் உலகில்
வளமையால் நிறைத்தாரே
மகிழ்வுடன் வாழ்ந்திடச் சொன்னாரே
2. இன்னலுற்ற நிலையில் அன்பர் இயேசுவின் அருகில்
வந்து நின்று செபித்தாரே - 2 நம்பி
வல்ல எந்தன் தேவன் எளியேனின் செபத்தை
கனிவுடன் கேட்டாரே
வேண்டுதல் கிடைத்திடச் செய்தாரே