முகப்பு


1003.பாட்டுப்பாடி ஆண்டவர்க்கு நன்றி கூறுங்கள்
பாட்டுப்பாடி ஆண்டவர்க்கு நன்றி கூறுங்கள்
காக்கும் நல்ல தேவன் அவர் இரக்கமுள்ளவர்
நல்லவரும் வல்லவருமாய் என்றும் அவர் இருப்பதினாலே

1. செடியைப் பிரிந்த கொடியைப் போல நாமெல்லாம்
மடிந்து அழிந்து போயிடாமல் காத்திடுவாரே - 2
கடலில் தவித்த பேதுருவைப் போல நாமும் - 2
துன்பம் வந்தால் துயரம் வந்தால் இயேசுவை அழைப்போம்
நிரந்தரமாய் சந்தோசம் தந்திடுவாரே

2. வாழ்வு தரும் வார்த்தையெல்லாம் உம்மிடம் தானே
என்று சொல்லி அவர் பாதம் பணிந்திடுவோம் நாம் - 2
சுமை சுமந்து சோர்ந்திருப்போர் விரைந்து வாருங்கள் - 2
என்று சொன்ன இயேசுவை நாம் அணுகிச் செல்வோம்
சுகம் தந்து சமாதானம் தந்திடுவாரே