முகப்பு


1008.மகிழ்வோம் மகிழ்வோம் தினம் அகமகிழ்வோம்
மகிழ்வோம் மகிழ்வோம் தினம் அகமகிழ்வோம்
இயேசு இராசன் நம் சொந்தமாகினார்
இந்தப் பார்தலத்தின் சொந்தக்காரர் அவர்
எந்தன் உள்ளத்தின் சொந்தமானார்
ஆ ஆனந்தமே பரமானந்தமே இது மாபெரும் பாக்கியமே - 2

1. சின்னஞ்சிறு வயதில் என்னைக் குறித்துவிட்டார்
தூரம் போயினும் கண்டுகொண்டார் - 2
தமது சீவனை எனக்கும் அளித்து
சீவன் பெற்றுக்கொள் என்றுரைத்தார் - ஆ ஆனந்தமே

2. எந்தச் சூழ்நிலையும் அவர் அன்பினின்று
என்னைப் பிரிக்காது காத்துக்கொள்வார் - 2
என்னை நம்பி அவர் தந்த பொறுப்பதனை
அவர் வரும்வரை காத்துக்கொள்வேன் - ஆ ஆனந்தமே