1009.மலர் சொல்லும் நன்றி தேனாகுமே
மலர் சொல்லும் நன்றி தேனாகுமே
வான் சொல்லும் நன்றி மழையாகுமே
நிலம் சொல்லும் நன்றி பயிராகுமே
நீர் சொல்லும் நன்றி வளமாகுமே
நீ சொல்லும் நன்றி என்ன - நெஞ்சே
நீ சொல்லும் நன்றி என்ன
1. ஆண்டவர் வாழும் ஆலயமானேன்
அன்பென்னும் தீபம் ஏற்றி வைப்பேன்
யான் என்னதென்னும் ஆணவம் வெல்வேன்
யாவர்க்கும் நற்செய்தி சொல்லிடுவேன் - நீ சொல்லும்
2. மரம் சொல்லும் நன்றி நிழலாகுமே
மணி சொல்லும் நன்றி ஒலியாகுமே
சுரம் சொல்லும் நன்றி உழைப்பாகுமே
கடல் சொல்லும் நன்றி அலையாகும் - நீ சொல்லும்
வான் சொல்லும் நன்றி மழையாகுமே
நிலம் சொல்லும் நன்றி பயிராகுமே
நீர் சொல்லும் நன்றி வளமாகுமே
நீ சொல்லும் நன்றி என்ன - நெஞ்சே
நீ சொல்லும் நன்றி என்ன
1. ஆண்டவர் வாழும் ஆலயமானேன்
அன்பென்னும் தீபம் ஏற்றி வைப்பேன்
யான் என்னதென்னும் ஆணவம் வெல்வேன்
யாவர்க்கும் நற்செய்தி சொல்லிடுவேன் - நீ சொல்லும்
2. மரம் சொல்லும் நன்றி நிழலாகுமே
மணி சொல்லும் நன்றி ஒலியாகுமே
சுரம் சொல்லும் நன்றி உழைப்பாகுமே
கடல் சொல்லும் நன்றி அலையாகும் - நீ சொல்லும்