முகப்பு


1011.வானம் போன்று நன்மை செய்த இறைவா
வானம் போன்று நன்மை செய்த இறைவா
வாழ்வை நாளும் நடத்தி எம்மைக் காத்தாய் - 2
அருவி நீரைப் போல உள்ளம் துள்ளிப்பாடும் - 2
இதய நன்றி கோடி கோடி இறைவா
நீ ஆட்கொண்டு உன் விருப்பம் நிறைவேற்று - 2
வானம் போன்று நன்மை செய்த இறைவா

1. ஒவ்வொரு நாளும் நான் வாழ்ந்த வாழ்வு
உன் உன்னதமான வல்ல செயலின் கரங்கள்
சந்தித்த நண்பரெல்லாம் சாதித்த செயல்களெல்லாம்
அன்பே உன் இரக்கத்தின் வரங்கள்
இதை எண்ணும் போது இதயம் நன்றியினால் மின்னும் - 2
எப்படித்தான் உனக்கு நன்றி சொல்வேன்
என்னை முழுவதும் தந்து உனக்காய் வாழ்வேன் - 2

2. இப்புவிதன்னில் வாழும் மாந்தர் வாழ
எத்துணை அன்பை என்னுள் நீயும் பொழிந்தாய்
நம்பிக்கை இழந்தவர்க்கு வெம்பிச் சோர்ந்த இளைஞர்கட்கு
நம்பிக்கை விளக்காக வாழ்வேன் - 2
உனை ஏற்று வாழும் மனிதர் ஏற்றம் காணச் செய்வேன் - 2
எப்படித்தான் உனக்கு நன்றி சொல்வேன்
என்னை முழுவதும் தந்து உனக்காய் வாழ்வேன் - 2