முகப்பு


1014.அம்மா அமுதினும் இனியவளே
அம்மா அமுதினும் இனியவளே
அமலியாய் உதித்தவளே அகமே மகிழ்வாய் மரியே - 2

1. தேவனாம் ஆண்டவரைப் பூவினில் ஈன்றவளே

அருளினிலே உறைந்தவளே அடியவர் நாவில் நிறைந்தவளே

2. அமலியாய் அவதரித்தாய் அலகையின் தலைமிதித்தாய்
அவனியிலே அருள்பொழிவாய் அடியவர் தாயாய் அமைந்திடுவாய்

3. அருள்நிறை மாமரியே அமல உற்பவியே
கறைபடா கன்னிகையே காத்திடுவாயே எம்மையே