முகப்பு


1018.அம்மா நீ தந்த செபமாலை
அம்மா நீ தந்த செபமாலை
செபிக்கும் நாளெல்லாம் சுபவேளை
அன்றாடம் ஓதி உயர்வடைந்தோம்
மன்றாடும் நலன்கள் உடனடைந்தோம்

1. சந்தோச தேவ இரகசியத்தில் தாழ்ச்சியும் பிறரன்புமாய் நின்றாய்
எம் தோசம் தீர இயேசுபிரான் உம் அன்பு மகனானார் அவரை
காணிக்கை வேண்டி புலம்பியதும் வீணாகவில்லை தாய்மரியே
உம் வாழ்வு எமக்கு முன்மாதிரியே

2. துயர்நிறை தேவஇரகசியத்தில் தூயவரின் வியாகுலங்கள் கண்டோம்
உயர் வாழ்விழந்த எமக்காக உன் மைந்தன் உயிர் தந்தார் அவரை
சாட்டைகளும் கூர் முள்முடியும் வாட்டிய சிலுவைப்பாடுகளும்
சாய்த்திட்டக் கோரம் பார்த்தாயம்மா
தாய் நெஞ்சம் நொறுங்கியதார் அறிவார்