முகப்பு


1030.அழகோவியமே எங்கள் அன்னை மரியே
அழகோவியமே எங்கள் அன்னை மரியே
உயிரோவியமே எங்கள் உள்ளம் கவர்ந்தவளே - 2
உன் பார்வை சொல்லும் கருணையும் பாதமலரின் அருமையும்
அழகே அழகே எங்கள் அம்மா நீ அழகே

1. கோடான கோடி மக்கள் குறைகளைத் தீர்ப்பவளே
கொள்ளை அழகோடு எங்கள் ஆலயம் அமர்ந்தவளே
அம்மா நீ தேரினிலே பவனி வரும் போதினிலே
ஒய்யாரமாக மனம் ஊர்வலம் போகிறதே
யாரும் இல்லா ஏழை எங்கள் தஞ்சம் நீயே தாயே
உம்மை நம்பி வந்தோம் இங்கு உள்ளங்கள் எல்லாம் தந்தோம்
உந்தன் முகத்தைப் பார்க்கும் போது உள்ளம் மகிழுதே
உந்தன் நாமத்தைச் சொல்லும் போது நெஞ்சம் இனிக்குதே

2. ஆதாரம் நீயே என்று அண்டி வருவோர்க்கு எல்லாம்
ஆதரவு தருபவளே வேளாங்கண்ணித் தாய் மரியே
அம்மா உன் காட்சி எல்லாம் ஏழைகளின் பாக்கியமே
எந்நாளும் இவர்களுக்கு உதவிடும் உம் திருக்கரமே
கண்ணின் மணியைப் போலே எம்மைக் காத்திடும் தெய்வத்தாயே
மண்ணின் மைந்தர்கள் நாங்கள் உந்தன் பாதம் பற்றியே வந்தோம்
இன்னும் ஒருமுறை என் தாயே நீ இந்த உலகினில் பிறந்தால்
ஏழை எளியவர் உம்மோடே இங்குப் புது உலகம் படைப்பார்