1036.அன்னைக்குக் கரம் குவிப்போம் அவள்
அன்னைக்குக் கரம் குவிப்போம் அவள்
அன்பைப் பாடிடுவோம் - 2
1. கன்னிமையில் இறைவன் உருக்கொடுத்தார் - அந்த
முன்னவனின் அன்னை எனத் திகழ்ந்தாள் - 2
மனுக்குலம் வாழ்ந்திடப் பாதை படைத்தாள் - 2
தினம் அவள் புகழினைப் பாடிடுவோம்
2. பாவமதால் மனிதன் அருள் இழந்தான் - அன்று
பாசமதால் அன்னைக் கருணை கொண்டாள் - 2
பாரினில் வாடினோர் வாழ்வு கண்டார் - 2
பாரினில் அவள் புகழ் பாடிடுவோம்
3. அன்னைமரி உலகில் வாழ்ந்த வழி - நாம்
சென்றிடுவோம் அதுவே சிறந்த வழி
நல்வழி நாடிடும் யாவரும் இன்று
நல்வழி கண்டிடச் செய்திடுவோம்
அன்பைப் பாடிடுவோம் - 2
1. கன்னிமையில் இறைவன் உருக்கொடுத்தார் - அந்த
முன்னவனின் அன்னை எனத் திகழ்ந்தாள் - 2
மனுக்குலம் வாழ்ந்திடப் பாதை படைத்தாள் - 2
தினம் அவள் புகழினைப் பாடிடுவோம்
2. பாவமதால் மனிதன் அருள் இழந்தான் - அன்று
பாசமதால் அன்னைக் கருணை கொண்டாள் - 2
பாரினில் வாடினோர் வாழ்வு கண்டார் - 2
பாரினில் அவள் புகழ் பாடிடுவோம்
3. அன்னைமரி உலகில் வாழ்ந்த வழி - நாம்
சென்றிடுவோம் அதுவே சிறந்த வழி
நல்வழி நாடிடும் யாவரும் இன்று
நல்வழி கண்டிடச் செய்திடுவோம்