முகப்பு


1039.அன்னையாய் அருளமுதாய் நல் ஆசானாய்
அன்னையாய் அருளமுதாய் நல் ஆசானாய்
அருமருந்தாய் விண்ணவர்க் கரசியாய்
மண்ணில் உயிர்க்கெல்லாம் மாதாவாய்
மாசிலாக் கன்னியாய் கர்த்தரை ஈன்ற தவமே
தவத்தின் உருப்பயனே என் தாயான அம்மா - 2
வண்ண வண்ண லீலி மலர்
அன்னைமரி நீயே ஆரோக்கியத் தாயே
கன்னல் சுவை தேனமுதே கன்னிமரியாயே - 2
தன்னை இந்தப் புவிக்களித்த இறைவன் திருமகன் உன்னை
தாயாக ஆசி தந்தான் தான் பிறக்கும் முன்னே - 2

1. அள்ள அள்ளக் குறையாத ஆழியம்மா உனதுள்ளம்
தெள்ளுதமிழ் காவியமாய் தித்திக்கும் கருணை வெள்ளம் - 2
வள்ள லம்மா எங்களையே வாழவைக்கும் தாய் அம்மா
எல்லை யில்லா பேரின்பத்தின் எழில் வாசல் திருவிளக்கே - 2

2. தாளாத நோய்க் கொடுமைக் காளாகித் தவித்து நின்றோம்
கோடான கோடி மக்கள் குறைகளைத் தீர்ப்பவளே - 2
வேளாங்கண்ணி யமர்ந்த வேதநாயகன் தாயே
ஆதாரம் நீர் துணையே ஆரோக்கிய மாமரியே - 2