முகப்பு


1071.கருணை நிறைந்தவளே - அம்மா
கருணை நிறைந்தவளே - அம்மா
கனிவைக் கொடுப்பவளே
பரிந்து பேசுபவளேநீ கன்னி மாமரியே
ஆவே - 4

1. பாவமன்றிப் பிறந்தவளே பாவையர்க்கு மாதிரியே
ஆவியினால் நிறைந்தவளே ஆண்டவர்க்குப் பணித்தவளே
பாவம் செய்த இம்மானிடர்க்கு - 2
உன் மகவைக் கொடுத்தவளே
வாழ்க அம்மா வாழ்க - நீ
வாழ்க என்றும் வாழ்க

2. வாழ்வினிலே ஒளிவிளக்காய் வாழ்ந்து வரும் நாயகியே
பாரினிலே மாந்தருக்கு வழித்துணையாய் இருப்பவளே
பாதம் தேடி உனை நாடி வந்தோம் - 2
அணைத்தெம்மை காத்திடுவாய் - வாழ்க அம்மா