முகப்பு


1077.கோடி விண்மீன் வானத்திலே கண்டேனம்மா அது
கோடி விண்மீன் வானத்திலே கண்டேனம்மா அது
கூடி ஒன்றாய்த் திருமுடியில் நின்றதேனம்மா - 2
சத்தியத்தின் பேரொளியாம் தேவ அன்னை - 2 - அந்த
உத்தமியின் ஒளிக்கு விண்மீன் உறவு கொண்டதே

1. வானத்திலே ஒளி வீசி வளரும் வெண்மதி - தாய்ப்
பாதத்திலே எழில் காட்டி இருப்பதும் என்ன - 2
ஞானத்தைப் படைத்த தேவன் தாயல்லவா - 2 - அன்னை
தாள் பணிந்த வெண்மதியின் நிலையைச் சொல்லவா

2. ஆரோக்கியம் தேடி வந்தோர் ஆலமரக் குளத்தடியில்
அருள்நிறை மரியே என்று செபிப்பதும் என்ன - 2
கருணைத் திருவுருவாம் கன்னி மரியாள் தந்த
காட்சிக்கு மாதாகுளம் சாட்சியாகுமே - 2