1093.தாவீதின் குலமலரே
தாவீதின் குலமலரே
ஒளி தாங்கிடும் அகல்விளக்கே - எமைக்
காத்திடும் ஆரணங்கே அருள் சுரந்திடும் தேன்சுனையே - 2
1. இறைவனே முதலில் உனைத் தெரிந்தார்
கறை சிறிதில்லாக் காத்திருந்தார் - 2
மறையவர் புகழும் மாமணியே
கரை சேர்ப்பதுவே உன் பணியே
2. மக்களின் மனமே மகிழ்ந்திடவே
நற்கனி சுதனை எமக்களித்தாய் - 2
கற்றவர் மற்றவர் யாவருமே
பொற்பதம் சேர்த்திட வேண்டுமம்மா
ஒளி தாங்கிடும் அகல்விளக்கே - எமைக்
காத்திடும் ஆரணங்கே அருள் சுரந்திடும் தேன்சுனையே - 2
1. இறைவனே முதலில் உனைத் தெரிந்தார்
கறை சிறிதில்லாக் காத்திருந்தார் - 2
மறையவர் புகழும் மாமணியே
கரை சேர்ப்பதுவே உன் பணியே
2. மக்களின் மனமே மகிழ்ந்திடவே
நற்கனி சுதனை எமக்களித்தாய் - 2
கற்றவர் மற்றவர் யாவருமே
பொற்பதம் சேர்த்திட வேண்டுமம்மா