முகப்பு


1094.தினம் தினம் எனில் அருள் வரம் தரும் மரியே தாய்மரியே
தினம் தினம் எனில் அருள் வரம் தரும் மரியே தாய்மரியே
வசந்தங்கள் வரும் வாழ்வினில் இன்று
உமை நான் வாழ்த்த வந்தேன்

1. வானதூதர் வாழ்த்துச் சொல்ல வாழ்வைச் சுமந்தவளே
வாடி நின்ற மாந்தர் நெஞ்சில் வசந்தம் வீசச் செய்தாய்
மனத்தினில் வலம்வரும் வளர்பிறையே
வழியினில் ஒளிதரும் விடிவெள்ளியே - 2
எந்தன் அருளே அமுதே அறிவே அமுதே ஆண்டவனின் தாயே

2. காலமெல்லாம் காத்திருந்த கடவுளைக் காணச் செய்தாய்
காக்கும் தேவன் கரங்களிலே - எம் வாழ்வினினை உணர வைத்தாய்
இதயத்தில் எழுந்திடும் இதயவளே
இகமதில் சுடரெனத் திகழ்பவளே
புது உலகம் மலர்ந்திட புதுமைகள் புரியும் வேளையின் நாயகியே