முகப்பு


1114.மறந்தாலும் மறவாத தாய்மரியே உந்தன்
மறந்தாலும் மறவாத தாய்மரியே உந்தன்
மலர்ப்பாதம் பணிவேனம்மா - 2
இறந்தாலும் இறவாத மாமரியே - உன்னை
இசையாலே புகழ்வேனம்மா - 2

1. கடலினிலே கண்டெடுத்த விலையுயர்ந்த முத்தினைப் போல்
உலகினிலே இறையவனின் சொத்தாகினாய் - 2
பல வழியில் நிலைமாறித் தடுமாறும் மானிடரை - 2
திருமகனின் பதம் சேர்க்கும் வழியாகினாய்

2. இறைவார்த்தை நிதம் கேட்டு இதயத்தில் தியானித்து
கறையேதும் இல்லாமல் சிறந்தோங்கினாய் - 2
முறையாக இவ்வுலகில் இறைஇயேசு வழி வாழ - 2
குறையாத அருள்பொழியும் சுனையாகினாய்