1134.விண்மீன் முடியென கொண்டவளே எங்கள்
விண்மீன் முடியென கொண்டவளே எங்கள்
விமலனைத் தாங்கிய ஆலயமே
எழில்மலர் போன்ற சித்திரமே - உந்தன்
நித்திய அழைப்பினை ஏற்கவந்தோம் - 2
1. அன்பிலும் அருளிலும் வளரச் செய்வாய் - இறை
ஆசீரை எங்களில் மிளிரச் செய்வாய் - 2
இறைவாக்கினை யாம் மனத்திற்கொண்டே - என்றும்
உன்னைப் போல் ஊன்றி வாழச் செய்வாய் - 2
இகமதில் மலர்ந்திட இறைபுகழ் பாடிட
இயேசுவின் பாதத்தில் சேர்த்திடுவாய் - 2
2. நீதியில் யாம் செல்ல வழிகாட்டுவாய் - என்றும்
நேரிய நெறிதனில் வளரச் செய்வாய் - 2
சமத்துவம் என்னும் சங்கீதத்தை - யாம்
பாரெங்கும் பாடிட வரம் தருவாய் - 2
வலியவர் அரியணை உடைந்திட தகர்ந்திட
எளியவர் வாழ்வு மலரச் செய்வாய்
விமலனைத் தாங்கிய ஆலயமே
எழில்மலர் போன்ற சித்திரமே - உந்தன்
நித்திய அழைப்பினை ஏற்கவந்தோம் - 2
1. அன்பிலும் அருளிலும் வளரச் செய்வாய் - இறை
ஆசீரை எங்களில் மிளிரச் செய்வாய் - 2
இறைவாக்கினை யாம் மனத்திற்கொண்டே - என்றும்
உன்னைப் போல் ஊன்றி வாழச் செய்வாய் - 2
இகமதில் மலர்ந்திட இறைபுகழ் பாடிட
இயேசுவின் பாதத்தில் சேர்த்திடுவாய் - 2
2. நீதியில் யாம் செல்ல வழிகாட்டுவாய் - என்றும்
நேரிய நெறிதனில் வளரச் செய்வாய் - 2
சமத்துவம் என்னும் சங்கீதத்தை - யாம்
பாரெங்கும் பாடிட வரம் தருவாய் - 2
வலியவர் அரியணை உடைந்திட தகர்ந்திட
எளியவர் வாழ்வு மலரச் செய்வாய்