முகப்பு


1151.குழந்தை இயேசுவைக் கரங்களில் ஏந்தி
குழந்தை இயேசுவைக் கரங்களில் ஏந்தி
காட்சியளித்திடும் சூசை முனியே
கைகளைக் கொட்டி மங்களம் பாடி
புகழ்ந்திட நாங்கள் கூடிவந்தோம் - 2
புனித சூசையை நாடி நின்றோம்

1. தந்தையைப் போல அறிவினைக் கொடுத்து
தாயினைப் போன்று அன்பினைக் காட்டி
உற்ற நண்பனாய் ஊரில் தீபமாய்
இந்த உலகத்தில் வந்திடும் வளனே
மங்கலம் சொல்லி கைகளைக் கொட்டி
மாநிலம் எங்கும் உம் புகழ் சொல்வோம் - புகழ்ந்திட

2. கன்னிமரியாளின் துணைவரும் நீரே
இயேசு குழந்தையை வளர்த்தவர் நீரே
உகந்த பிள்ளைகள் என்றெனச் சொல்லி
ஊரென வந்தோம் உமையே புகழ்ந்தோம்
மன்னர் கோத்திர மணிமுடி மைந்தா
மாண்புடன் எம்மை மகிழ்வுடன் காப்பாய்