1157.வான் போற்றும் மலரே சூசைமுனியே
வான் போற்றும் மலரே சூசைமுனியே
என் தேவன் தந்தையே - என்றும்
உன் அன்பு நிழலினில் ஓயாத உழைப்பினில்
உன் பாதம் நான் தொடர்வேன்
உந்தன் வாய்மை வழியினிலே என்றும்
தூய்மை நெறியினிலே அன்பின்
சிறகினில் வதிந்து நான் வாழுவேன்
1. அறநெறி வாழ்வினில் அனைவருமே
அன்பினில் அகிலமும் சிறந்திடவே
உழைப்பதன் மேன்மையை உணர்ந்திடவே
உண்மை நன்னெறியினில் உயர்ந்திடவே - இறை
இயேசுவைக் கையில் ஏந்திய
புனிதருள் முதல்வனே வாழியவே
2. இல்லறம் நல்லறம் என விளங்க
இடர்பல ஏற்றிடத் துணிந்தவரே
திருமறை என்ற சுடராய் ஒளிர்ந்தவரே
இறைவனின் திருவுளம் அறிந்தவரே - இறை இயேசுவை
என் தேவன் தந்தையே - என்றும்
உன் அன்பு நிழலினில் ஓயாத உழைப்பினில்
உன் பாதம் நான் தொடர்வேன்
உந்தன் வாய்மை வழியினிலே என்றும்
தூய்மை நெறியினிலே அன்பின்
சிறகினில் வதிந்து நான் வாழுவேன்
1. அறநெறி வாழ்வினில் அனைவருமே
அன்பினில் அகிலமும் சிறந்திடவே
உழைப்பதன் மேன்மையை உணர்ந்திடவே
உண்மை நன்னெறியினில் உயர்ந்திடவே - இறை
இயேசுவைக் கையில் ஏந்திய
புனிதருள் முதல்வனே வாழியவே
2. இல்லறம் நல்லறம் என விளங்க
இடர்பல ஏற்றிடத் துணிந்தவரே
திருமறை என்ற சுடராய் ஒளிர்ந்தவரே
இறைவனின் திருவுளம் அறிந்தவரே - இறை இயேசுவை