முகப்பு


1170.நல்ல காலம் பிறந்திருக்கு பதுவை புனிதரின் அருள் நமக்கு
நல்ல காலம் பிறந்திருக்கு பதுவை புனிதரின் அருள் நமக்கு
பலகோடி நன்மைகளைப் பரிந்துதவிடவே வருவார்
மன்றாடுவோம் நாம் மன்றாடுவோம்
பாதைகள் தெரிந்திட நடை தொடர்வோம்

1. எளிமையின் கோலத்தில் ஆலய பீடத்தில்
ஆறுதல் சொல்கின்ற அருளாளர்
ஏழைகள் எளியவர் வறியவர் வருகையில்
அருட்கரம் தருகின்ற அன்பாளர்
தயை கடலே தடாகமே தனித்தவரின் தஞ்சமே
திருவடி வந்தோம் அருள் பொழிவாய்

2. எங்கள் தஞ்சமும் எங்கள் மகிழ்ச்சியும்
எங்கள் நம்பிக்கையும் நீரல்லவோ
தூய்மை துலங்கும் லீலி மலரே
விலை மதிப்பில்லா மாணிக்கமே
வீரம் பொருந்திய மேய்ப்பவரே
மண்ணுலகின் காவலரே
திருவடி வந்தோம் அருள் பொழிவாய்