முகப்பு


1264.நான் காணாமல் போன ஆடல்லவா
நான் காணாமல் போன ஆடல்லவா
கர்த்தர் என்னைத் தேடுகிறார் - 2

1. ஆதாமைப் போல ஆண்டவர் வார்த்தையே
அன்புமீறி நான் நடந்தேன் - 2
ஆபேலைக் கொன்ற காயினைப் போல
மனுக்கொலை நான் புரிந்தேன்
ஆரம்ப முதலே ஆபத்தில் இருந்தேன்
அன்பர் என்னைத் தேடுகின்றார்

2. கைதூக்கி என்னைக் காப்பாற்ற இழுத்தார்
காட்டித் தந்த யூதாசானேன் - 2
கல்வாரிச் சிலுவை கர்த்தருக்குத் தந்தேன்
பெரும் பழி நான் சுமந்தேன்
கல்லோடு முள்ளில் கால்பின்னிக் கிடந்தேன்
கர்த்தர் என்னைத் தேடுகின்றார்