முகப்பு


1332.ஆண்டவரே நீரே என்னை மயக்கிவிட்டீர்
ஆண்டவரே நீரே என்னை மயக்கிவிட்டீர்
நானும் மயங்கிப்போனேன்

1. தாயின் கருவினிலே உருவாக்கினீர்
தடுக்கி விழும்போது தாங்கி நின்றாய்
தூர சென்றாலும் துணையாய் வந்தீர்
துன்பத்தில் வாழ துணிவைத் தந்தாய்
அஞ்சாதே என் மகளே உன்னோடு நான் இருப்பேன்
கலங்காதே என் மகளே கரம் பிடித்து நடத்திடுவேன்
உலகம் முடிவுவரை உன்னோடு நான் இருப்பேன்

2. எளியோர்க்கு நற்செய்தி சொல்லிடுவாய்
விடுதலை வாழ்வுக்கு உழைத்திடுவேன்
உலகிற்கு ஒளியாய் விளங்கிடுவாய்
உண்மைக்குச் சாட்சி சொல்லிடுவேன் - அஞ்சாதே