முகப்பு


1338.எளிய மனம் ஒன்றின் பாடல்
எளிய மனம் ஒன்றின் பாடல்
எங்கே என் இறை என்ற தேடல் - 2
இதழ் விரித்த பூக்களிலும் இரவு தந்த நிலவினிலும்
இதம் பரப்பி நடந்து போன தென்றலிலும்
அடித்த புயலினிலும் அடங்காத கடலினிலும்
ஓடும் நதியிலும் ஆடும் மயிலிலும்
கானக வெளியிலும் காலை ஒளியிலும்
சுழலும் பூமியிலும் மழலை அழகிலும் - 2
மலர்ந்த மலர்ந்த முகத்திலும் மனித அன்பிலும்
சா சநி சா சநி சா சநி சநி சநி - 2
சக ரிம கரி சநி சரி சநி சப மா
கச நிரி சநி பம மப மக கரி ரிக சா

1. திருவருளே உன் அருகினில் வர வர அமைதியின் தரிசனம் ஆகும்
அகநிறைவே உன் அன்பினில்
அனுதினம் வளர்ந்திட எனக்கோர் ஆசை
அகம் மலரும் உன் ஒளி படரும்
பணிவேன் உன் அணியோடு என் பீடம் அழகாகும்
உண்மை அங்கு தீபம் ஆகும்
நீதிக் கனிகளைக் காணிக்கையாக்குவேன்
ஏழை மனிதரின் கண்ணீர் போக்குவேன்
மனிதம் உயர்வெனச் சங்கே முழங்கு நின்று முழங்கு
எங்கும் மனிதம் என்று முழங்கு - 2
உன்னைத் தேடினேன் அதில் என்னையும் தேடினேன்

2. காலம் இது அருளின் காலம் அருள் புரிய - 2
கருணைக் கரம் விரியும் காலம் கருணைக்கரம் விரிந்து - 2
பெறுவதை விடினும் மேலாய்ப் பகிர்வதில் இன்பம் கண்டேன்
அறநெறி நின்றிடும் வாழ்வில் - என்
அகம் நிறைவடைவதை உணர்ந்தேன்
பணிவேன் உன் அணியோடு என் பீடம்
அழகாகும் உண்மை அங்கு தீபம் ஆகும் - ஓடும் நதியிலும்