1340.என்னைப் பெயர் சொல்லி அழைத்த தெய்வமே
என்னைப் பெயர் சொல்லி அழைத்த தெய்வமே
நான் உருவாகுமுன்னே எனை அறிந்திருந்த தெய்வமே
நான் வெளிப்படுமுன்பே எனை அர்ச்சித்த தெய்வமே
உள்ளங்கையில் பொறித்து வைத்துக் காத்த தெய்வமே
போற்றுகிறேன் புகழுகிறேன் வாழ்த்துகிறேன் வணங்குகிறேன்
1. புதிய வாழ்வொன்றை எனக்கு நீ தந்தாய்
புதிய பாதையையும் எனக்குக் காட்டித் தந்தாய் - 2
புதிய வாழ்வினில் புனித பாதையில் - 2
புதிதாய் நான் செல்லும் புனிதப் பயணத்தில்
புலரும் விண்மீனாய் விரைந்து நீ வா
புதிய மனிதனாய் எனை மாற்ற வா - போற்றுகிறேன்
2. இரவிலும் பகலிலும் இணைந்தே வாழ்கிறீர்
இன்ப துன்பத்தையும் இனிதே பகிர்கிறீர் - 2
இன்றைக்கு இருந்து நாளைக்கு அழியும் - 2
இந்த உலகத்தின் படைப்புகள் யாவையும்
இரக்க உணர்வோடு காத்து வருகிறீர்
இகமதில் உமைப் புகழ வாய்ப்பளிக்கிறீர் - போற்றுகிறேன்
நான் உருவாகுமுன்னே எனை அறிந்திருந்த தெய்வமே
நான் வெளிப்படுமுன்பே எனை அர்ச்சித்த தெய்வமே
உள்ளங்கையில் பொறித்து வைத்துக் காத்த தெய்வமே
போற்றுகிறேன் புகழுகிறேன் வாழ்த்துகிறேன் வணங்குகிறேன்
1. புதிய வாழ்வொன்றை எனக்கு நீ தந்தாய்
புதிய பாதையையும் எனக்குக் காட்டித் தந்தாய் - 2
புதிய வாழ்வினில் புனித பாதையில் - 2
புதிதாய் நான் செல்லும் புனிதப் பயணத்தில்
புலரும் விண்மீனாய் விரைந்து நீ வா
புதிய மனிதனாய் எனை மாற்ற வா - போற்றுகிறேன்
2. இரவிலும் பகலிலும் இணைந்தே வாழ்கிறீர்
இன்ப துன்பத்தையும் இனிதே பகிர்கிறீர் - 2
இன்றைக்கு இருந்து நாளைக்கு அழியும் - 2
இந்த உலகத்தின் படைப்புகள் யாவையும்
இரக்க உணர்வோடு காத்து வருகிறீர்
இகமதில் உமைப் புகழ வாய்ப்பளிக்கிறீர் - போற்றுகிறேன்