முகப்பு


1342.குருத்துவப் புகழ் ஓங்கவே
குருத்துவப் புகழ் ஓங்கவே
செந்தமிழ் நாவில் எழுந்த இப்பாவில்
சிறந்த நம் திருமறைத் தொண்டர்கள் வாழியவே
குருத்துவப் புகழ் ஓங்கவே
பணிவிடை பெற அன்று பணிவிடை புரியவும் - 2
பலரின் வாழ்வுக்குப் பலியாய் வாழவும் - 2

1. காவிரி தென்பெண்ணை பாய்ந்து வரும் - வண்ண
பூவிரிச் சோலைகள் பூத்து நிற்கும் ஆ - 2
வங்கக் கடல் அலைகள் தாலாட்டும் ஆ - 2
தங்கத் திருநாடாம் தமிழக மண்ணதில்
எங்கும் இயேசு எனும் நாமம் முழங்கிட முழங்கிடவே - 2

2. இயல் இசை நாடக அரங்கினிலே - உயர்
இலக்கியம் எழுந்திடும் ஏட்டினிலே ஆ
தாயகப் பண்பாட்டின் சிறப்பினிலே ஆ - 2
ஆயக் கலைகளெனும் அறுபத்து நான்கிலும்
நாயகன் இயேசுவின் நற்செய்தி ஒலித்திட ஒலித்திடவே - 2