முகப்பு


1348.மகிழ்ந்திடாய் மாநிலமே - உந்தன்
மகிழ்ந்திடாய் மாநிலமே - உந்தன்
மைந்தரின் மாட்சியிலே - இன்று
பேரருள் பாய்ந்தது குருத்துவத்தால் - என்று
புகழ்ந்திடாய்த் திருமறையே - 2

1. உலகத்தின் பேரொளியாய் - வாழும்
உள்ளத்தின் ஆறுதலாய் - எந்தக் - 2
காலமும் வாழ்ந்திடும் எழில் நிலையாம் - இன்பக்
காட்சியே குருத்துவமே - 2

2. குருத்துவ நீர்ச்சுனையாய்த் - திகழ்
கிறிஸ்துவை ஈன்றவளே - இன்று - 2
காய்ந்திடும் பாருக்கு நீர் தெளிக்க - வரும்
குருக்களைக் காத்திடுவாய் - 2