முகப்பு


1434.கல்மனம் கரைய கண்களும் பனிக்க
கல்மனம் கரைய கண்களும் பனிக்க
கைகளைக் குவித்தேன் இறைவா
என் மனம் வருவாய் இறைவா - 2

1. என்னகம் புகுந்து இதயத்தில் அமர்ந்து
பொன்னகம் புனைவாய் இறைவா - 2 - அங்குப்
புன்மைகள் மறைந்து நன்மைகள் நிறைய
இன்னருள் தருவாய் இறைவா - 2

2. பாசத்தைக் களைந்து பாவத்தை விலக்க
பாதத்தைப் பிடித்தேன் இறைவா - 2 - துயர்
வீசிடும் புயலும் வெகுண்டெழும் அலையும்
அமைந்திடப் பணிப்பாய் இறைவா - 2

3. நான் எனும் அகந்தை நரகத்தை அழித்து
நல்லுலகமைப்போம் இறைவா - 2 அங்குப்
பூவெனும் இதயப் பீடத்தில் எனையே
பலியாய் அளிப்பேன் இறைவா