முகப்பு


1444.ஆயிரக் கணக்கான வருடங்களாய்
ஆயிரக் கணக்கான வருடங்களாய் - எம்
ஆண்டவரே உம்மை எதிர்பார்த்தோம்
இசுராயேல் சனங்களை ஆளவரும் - எம்
இயேசு இரட்சகரே எழுந்தருளும்
ஓசான்னா தாவீதின் புதல்வா
ஓசான்னா ஓசான்னா ஓசான்னா

1. மாமரி வயிற்றினில் பிறந்தவரே - மா
முனி சூசை கரங்களில் வளர்ந்தவரே
மானிடர் குலத்தினில் உதித்தவரே - எம்
மன்னவரே எழுந்தருள்வீரே

2. அற்புத யோர்தானில் தீட்சை பெற்றீர் - மா
அருள் தபோதனரால் புகழப்பட்டீர்
ஆகாயங்களை நீர் திறக்க விட்டீர் - உம்
ஆதி பிதாவிடம் பதவி பெற்றீர்

3. தாவீது அரசரின் புத்திரரே - ஓர்
தெய்வீக முடியோடு வந்தவரே
தருமர் எனப் புகழ் அடைந்தவரே - எம்
தேவனே தேவனே எழுவீரே

4. கானான் மணத்தினில் அழைக்கப்பட்டீர் - நீர்
கலங்கினவர்கள் பேரில் இரக்கப்பட்டீர்
கொண்டு வரச் சொன்னீர் சுத்தத் தண்ணீர் - அதைக்
கந்த ரசமாக்கிப் பெயரடைந்தீர்

5. புவியினில் புரிந்தீர் புண்ணியங்கள் - எம்
புத்தியில் புகுத்தினீர் அருள்மொழிகள்
பக்தியில் சேர்த்தீர் பல சீடர்கள் - மா
பவனியோடு வாரீர் படைத்தவரே

6. மரித்தவர்கள் அநேகர் உயிர்பெற்றார் - ஒரு மனமுடைந்த விதவை மகன் அடைந்தார்
மரிமதலேன் சகோதரன் பெற்றார் - எம்
மனுக்குலம் இரட்சிக்க வந்தவரே

7. குருடர்கள் பலர் பார்வை பெற்றார் - முடம்
கூன் செவிடர் பலர் சுகம் பெற்றார்
குசுடர் அதிகமே நலம் பெற்றார் - எம்
கடவுளே எம்மோடே வாரும் நீர்

8. யூதேயா நாட்டினில் புகழ் பெற்றீர் - எம்
யூதர் இராசரென்று முடிபெற்றீர்
எருசலேம் நகர்தனில் களிப்புற்றீர் - எம்
இயேசு அரசரே அரசாள்வீர்

9. பாவிகளைத் தேடி வந்தவரே - எம்
பாவங்கள் பொறுக்க வல்லவரே
பாடுகள் பட்டு உழைத்தவரே - எம்
பராபரனே உட்செல்வீரே

10. கோவேறு குட்டியே ஆசனமாய் - எம்
குழந்தைகள் துணியே பஞ்சணையாய்
கிளைகளே உமது செயக் கொடியாய் - எம்
கர்த்தரே சீக்கிரம் நடப்பீரே

11. உலகமே உமது அரிய வேலை - எம்
உயிருமே உமது மா புதுமை
உலகத்தை ஆண்டு வருபவரே - எம்
உலகரசே உள்ளே புகுவீரே