முகப்பு


1445.ஆண்டவர் புனித நகரத்தில்
ஆண்டவர் புனித நகரத்தில்
நுழைகையில் எபிரேய சிறுவர் குழாம்
குருத்து மடல்களை ஏந்தி நின்று
உன்னதங்களிலே ஓசன்னா
என்று மகிழ்வுடன் ஆர்ப்பரித்தார்

1. எருசலேம் நகருக்கு இயேசுபிரான்
வருவதைக் கேட்ட மக்களெல்லாம்
அவரை எதிர்கொண்டழைத்தனரே
குருத்து மடல்களை ஏந்தி நின்று
உன்னதங்களிலே ஓசன்னா
என்று மகிழ்வுடன் ஆர்ப்பரித்தார்