முகப்பு


1458.பாடுகள் நீர் பட்டபோது பாய்ந்து ஓடிய இரத்தம்
பாடுகள் நீர் பட்டபோது பாய்ந்து ஓடிய இரத்தம்
கோடிப் பாவம் தீர்த்து மோட்சம் கொள்ளுவிக்க வல்லதே
கெட்டுப் போனோம் பாவியானோம் கிருபை செய்யும் நாதனே
மட்டிலாக் கருணை என் மேல் வைத்திரங்கும் இயேசுவே -கெட்டுப்

1. துசிட யூதர் தூணினோடு தூய கைகள் கட்டியே
கசிடமாய் அடித்த போது பாய்ந்த செந்நீர் எத்துணை - கெட்டுப்

2. சென்னிமேற் கொடிய யூதர் சேர்த்து வைத்த முள்முடி
தன்னால் வடிந்த இரத்தத்தினால் சர்வ பாவம் நீங்குமே - கெட்டுப்

3. ஐந்து காயத்தால் வடிந்த அரிய இரத்தத்தினால்
மிஞ்சும் எங்கள் பாவம் தீர்க்க வேண்டுகிறோம் இயேசுவே - கெட்டுப்