முகப்பு


1464.மைந்தனார் சிலுவை மீது மாதுயருடன் வருந்த
மைந்தனார் சிலுவை மீது மாதுயருடன் வருந்த
நொந்தழுதாள் தாய் மரி

1. திருமகன் அறையுண்ட சிலுவை அடியில் நின்ற
தேவதாய் நொந்தழுதாள்

2. வேதனைக் கடலமிழ்ந்த மாதா ஆத்துமம் வதைய
வாள் பாய்ந் தூடுருவிற்று

3. நேய மகனை இழந்த தாய் அனுபவித்த துயர்
தானுரைக்க நாவுண்டோ?

4. அருமையாய் ஈன்ற சுதன் அவசுதையை கண்டிளகி
உருகிப் புலம்பினாள்

5. இரட்சகர் திருத்தாயார் இக்கொடிய வாதைப்பட
யார் கண்டழாதிருப்பார்

6. திருமகன் துயரத்தால் உருகும் தாயைக் கண்டுள்ளம்
கரையாதார் யாருண்டு?

7. அன்புள்ள தம் திருமகன் துன்ப துயர் அவசுதையில்
தன் சீவன் தரக் கண்டாள்

8. பட்சவூருணி மாதாவே பரிதபித்தே உம்மோடு
பாவி நான் அழச் செய்யும்

9. ஆதி இயேசுவை நேசித்தே யான் அவருக்கினியனாய்
அன்பால் என்னுள்ளம் சுடும்

10. தேவ தாயே தயை செய்து பாவி என்னிருதயத்தில்
இயேசு காயம் பதியும்

11. சிலுவை அடியில் நின்று தேவதாயே உம்மோடு நான்
புலம்ப ஆசிக்கின்றேன்

12. கன்னியர் அரசே தாயே என் கண்ணீரை உம்முடைய
கண்ணீரோ டேற்றருளும்

13. அன்பாம் அக்கினி மூட்டி அடியோரைத் தீர்வை நாளில்
ஆதரிப்பீர் கன்னியே

14. மண் உடல் உயிர் பிரிந்தால் வான் மோட்சத் தாத்துமம் சேர்ந்து
வாழவுஞ் செய்தருளும்