1467. எங்கே சுமந்து போகிறீர் பொங்கும் பகைவராலே
எங்கே சுமந்து போகிறீர் பொங்கும் பகைவராலே
அங்கம் நடுநடுங்க எங்கே போகிறீர்
1. மனித பாவத்தாலே மரணத் தீர்ப்பைப் பெற்று
தூய செம்மறி போலே துக்கத்துடன் வருந்தி எங்கே போகிறீர்
2. பாரச் சிலுவை மரம் பாவத்தின் சுமைதாங்கி
பாசத்துடன் அணைத்து பாரத்துடன் நடந்து எங்கே போகிறீர்
3. கல்வாரிமலை நாடி தள்ளாடி தரை வீழ்ந்து
எல்லோரின் பாவங்களைத் தனிமையாய்ச் சுமந்து எங்கே போகிறீர்
4. மாமரிகன்னி அன்னை மகனின் கோலங்கண்டு
மாதுயருடன் வாடி மனம் நொந்து வருந்த எங்கே போகிறீர்
5. உதிரமாறாய்ச் சிந்தி உள்ள உரமிழந்து
சீரோன் சீமோன் துணையை ஏற்று வழி நடந்து எங்கே போகிறீர்
6. கர்த்தனே உம் வதனம் இரத்தக்கறையால் மங்கி
உத்தமி வெரோணிக்கம்மாள் வெண் துகிலாற்றுடைத்து - எங்கே
7. பாவங்கள் ஒன்றாய்ச் சேர்ந்த பாரச்சுமையினாலே
மீண்டும் தரையில் வீழ்ந்தும் வீரத்துடன் எழுந்து எங்கே போகிறீர்
8. புண்ணிய மகளிர் பலர் புலம்பி அழும் வேளை
ஆறுதல் கூறி நீரும் நேசக் கண்ணீர் சொரிந்து எங்கே போகிறீர்
9. சிலுவை பாரத்தாலே மாமரி ஏகமைந்தன்
மூன்றாம் முறை தரையில் முகம் படிந்தெழுந்தும் எங்கே போகிறீர்
10. நீளாடை கழற்றவே கோடா கோடிக் காயங்கள்
இரத்தம் ஆறாய்ப் பெருகி வேதனையால் வருந்தி எங்கே போகிறீர்
11. நீட்டிய கால் கரத்தில் நீண்ட இரும்பாணிகள்
நிசுட யூதர் அறைந்தும் நேசத்திலே வெந்து பலியாகினீர்
12. சிலுவை பீடமேறி மும்மணி நேரந் தொங்கி
அரிய பிதாவை வேண்டி ஆருயிர் ஒப்படைத்து பலியாகினீர்
13. மரி தாய் மடிமீதில் மரித்த மகன் தாங்கி
ஏழு சோக வாள்களால் ஊடுருவி வருந்தி தாயே நின்றீர்
14. கர்த்தரின் உடல்தனை கல்லறைக்குள் அடக்கி
உத்தான சீவனுமாய் உயிருடன் எழுந்து எப்போ வருவீர்
அங்கம் நடுநடுங்க எங்கே போகிறீர்
1. மனித பாவத்தாலே மரணத் தீர்ப்பைப் பெற்று
தூய செம்மறி போலே துக்கத்துடன் வருந்தி எங்கே போகிறீர்
2. பாரச் சிலுவை மரம் பாவத்தின் சுமைதாங்கி
பாசத்துடன் அணைத்து பாரத்துடன் நடந்து எங்கே போகிறீர்
3. கல்வாரிமலை நாடி தள்ளாடி தரை வீழ்ந்து
எல்லோரின் பாவங்களைத் தனிமையாய்ச் சுமந்து எங்கே போகிறீர்
4. மாமரிகன்னி அன்னை மகனின் கோலங்கண்டு
மாதுயருடன் வாடி மனம் நொந்து வருந்த எங்கே போகிறீர்
5. உதிரமாறாய்ச் சிந்தி உள்ள உரமிழந்து
சீரோன் சீமோன் துணையை ஏற்று வழி நடந்து எங்கே போகிறீர்
6. கர்த்தனே உம் வதனம் இரத்தக்கறையால் மங்கி
உத்தமி வெரோணிக்கம்மாள் வெண் துகிலாற்றுடைத்து - எங்கே
7. பாவங்கள் ஒன்றாய்ச் சேர்ந்த பாரச்சுமையினாலே
மீண்டும் தரையில் வீழ்ந்தும் வீரத்துடன் எழுந்து எங்கே போகிறீர்
8. புண்ணிய மகளிர் பலர் புலம்பி அழும் வேளை
ஆறுதல் கூறி நீரும் நேசக் கண்ணீர் சொரிந்து எங்கே போகிறீர்
9. சிலுவை பாரத்தாலே மாமரி ஏகமைந்தன்
மூன்றாம் முறை தரையில் முகம் படிந்தெழுந்தும் எங்கே போகிறீர்
10. நீளாடை கழற்றவே கோடா கோடிக் காயங்கள்
இரத்தம் ஆறாய்ப் பெருகி வேதனையால் வருந்தி எங்கே போகிறீர்
11. நீட்டிய கால் கரத்தில் நீண்ட இரும்பாணிகள்
நிசுட யூதர் அறைந்தும் நேசத்திலே வெந்து பலியாகினீர்
12. சிலுவை பீடமேறி மும்மணி நேரந் தொங்கி
அரிய பிதாவை வேண்டி ஆருயிர் ஒப்படைத்து பலியாகினீர்
13. மரி தாய் மடிமீதில் மரித்த மகன் தாங்கி
ஏழு சோக வாள்களால் ஊடுருவி வருந்தி தாயே நின்றீர்
14. கர்த்தரின் உடல்தனை கல்லறைக்குள் அடக்கி
உத்தான சீவனுமாய் உயிருடன் எழுந்து எப்போ வருவீர்