முகப்பு


1477.சிலுவையில் அறையுண்ட மெசியா
சிலுவையில் அறையுண்ட மெசியா
இறை வல்லமையும் இறை ஞானமுமாயுள்ளார் - இதை
உள்ளங்கள் உணர்ந்திடட்டும் இந்த உலகமும் உணர்ந்திடட்டும்
அல்லேலூ அல்லேலூ அல்லேலூயா - 2

1. நெஞ்சினில் அமைதியை இழக்கின்றோம் மன
நிம்மதி இழந்தே தவிக்கின்றோம்
நோவிலும் சாவிலும் துடிக்கின்றோம் எங்கள்
தேவனே சிலுவையில் பொருள் சொல்லுவாய் இந்த
சிலுவை உமது வல்லமையோ
இந்த சிலுவை உமது ஞானமோ - அல்லேலூ அல்லேலூ

2. உறவுகள் நிறைவு தருவதில்லை எங்கள்
உள்ளத்தில் அன்பு வளர்வதில்லை
பிரிவுகள் பிளவுகள் பிணக்குகளே
எங்கள் வீட்டிலும் நாட்டிலும் வளர்வது ஏன் இந்த - சிலுவை

3. குற்றமில்லாதோர் மாய்கின்றார் உம்
குழந்தைகள் பசியில் மடிகின்றார்
நீதியை அழிப்போர் வாழ்கின்றார் பல
நேரிய மனிதர்கள் வீழ்கின்றார் இந்த - சிலுவை