முகப்பு


1479.ஆழியின் மேல் ஒளிர் விண்மீனே
ஆழியின் மேல் ஒளிர் விண்மீனே
அவனியில் இறைவனின் அன்னையும் நீ
என்றும் கன்னிகை ஆனவளும்
எழிலார் விண்ணக வாயிலும் நீ

1. தூதுவன் வாழ்த்துரை ஏற்றாய் நீ
தூயநல் அமைதியை அளிப்பாய் நீ
ஆதியில் ஏவாள் செய்வினையை
அகற்றி அவள் பெயர் மாற்றிடுவாய்

2. பாவத்தளைகளை அறுத்திடுவாய்
பரிவுடன் குருடர்க் கொளி தருவாய்
தீமைகள் அனைத்தும் போக்கிடுவாய்
திருவருட் கொடைகள் பெற்றளிப்பாய்

3. தாயென உன்னைக் காட்டிடுவார்
தனயர் எமக்காய்ப் பிறந்தவரும்
இயேசுவாய் உன்னிடம் உதித்தவரும்
எம்குறை உன் வழி ஏற்றிடுவார்

4. நிகரில்லாத கன்னிகையே
நிர்மல சாந்த குணவதியே
பாவப் பொறுத்தல் பெற்றெமக்கு
பண்போடு புனிதம் அருள்வாயே

5. புனித வாழ்க்கை வாழ்ந்திடவே
பயணம் நன்கு முடிந்திடவே
அதனால் இயேசுவை யாம் கண்டு
அகமகிழ்ந்திடவே அருள்வாயே

6. வானகத் தந்தையை வாழ்த்திடுவோம்
வானுயர் கிறித்துவை வணங்கிடுவோம்
தூய ஆவியைப் பணிந்திடுவோம்
பாகுபா டற்ற புகழ் சாற்றிடுவோம் - ஆமென்