முகப்பு


1480.வையகம் மகிழ்ந்து இங்குக் கொண்டாட
வையகம் மகிழ்ந்து இங்குக் கொண்டாட
வானகம் புகழ்தனை நின்றெதி ரொலிக்க
அப்போசு தலர் தம் புகழ்தனை ஈண்டு
வானமும் வையமும் இணைந்திசை பாட

1. மனிதர் தமக்கு நீதியும் வழங்கி
உலகின் உண்மை ஒளியாய் விளங்கும்
உங்கள் திருமுன் இதயக் குறைகள்
எடுத்தே உரைத்தோம் எம் குரல் கேட்டோம்

2. விண்ணக வாயிலைத் திறக்கவும் மூடவும்
எண்ணரும் ஆற்றல் கொண்டவர் நீங்கள்
எங்கள் பாவத் தளைகள் தெறிக்க
உங்கள் ஆணை தந்தருள் செய்வீர்

3. உலகோர் தமக்கு நீதி வழங்கிட
உலகின் முடிவில் வந்திடும் கிறித்து
முடிவே இல்லா பேரருள் வாழ்வை
அடைந்திட எம்மை அழைத்திடச் செய்வீர்

4. தந்தை திருமகன் தூய ஆவி
வந்தனம் வாழ்த்து புகழோடு பெறுக
ஆதியில் இருந்தது போலவே இதனை
ஓதுவோம் என்றும் என்றுமே - ஆமென்