முகப்பு


1482.செருக்கும் கொடுமையும் செறிந்தநம் பாவத
செருக்கும் கொடுமையும் செறிந்தநம் பாவத்
திரள்கள் இறைவனின் மாசில்லா
இருதயம் தன்னைப் பிளந்ததைப் பாரீர்!
இவ்விதம் வதைபெற என் செய்தார்?

2. ஆர்வம் தயங்கிய வீரனைக் கூட்டி
ஆணை தந்ததும் நம் பாவம்
கூர்மையான ஈட்டியைக் கொண்டு
குத்தித் திறந்ததும் நம் பாவம்!

3. திறந்த இதயத்தில் நின்று பிறந்தான்
திருஅவை கிறித்துவின் மணவாளி
சிறந்த வாசல் பேழையுட் செல்ல!
திருத்தி மனிதன் மீட்புறவே!

4. சிந்தும் செம்மறி உதிரத்தில் நமது
சிறுமைக் கறைகளைப் போக்கிடவே
இந்த இதயத்தில் நின்றெழும் நதிகள்
ஏழும் அருள்தரும் எந்நாளும்

5. இன்னும் தவறி இத்திரு இருதயம்
ஏங்கிடச் செய்தல் இழிவாகும்!
அன்பைக் காட்டும் அனற்பிழம் பதனை
அகத்தில் வளர்த்தல் நலமாகும்!

6. மகிமை உமக்கு இயேசுவே! எமக்கு
வரம்நும் இதயம் பொழிந்திடுமே
மகிமை தந்தைக்கும் அன்பின் ஆவிக்கும்
இனறும் என்றும் ஆகுகவே! - ஆமென்