1483.காலத்தின் ஆண்டவர் நீர் என்று
காலத்தின் ஆண்டவர் நீர் என்று
களிப்புடன் கிறித்துவே! உமையேற்கின்றோம்
ஞாலத்தின் மன்னவர் நீரென்றும் - ஒரே
நாயகன் என்றும் உமையேற்கின்றோம்
2. வன்மனங் கொண்டவர் உமைத் தமது
மன்னவர் என்றிட மறந்தாலும் நீர்
உன்னத மன்னர் என ஏற்று - உமை
உளமகிழ் வோடு புகழ்ந்தார்ப்பரிப்போமாக
3. அமைதியின் அரசரே! கிறித்துவே!
ஆர்த்தெழும் மாந்தரை உமதாக்கிடுவீர்!
இமையெனக் காத்திடப் பிரிந்தவரை - ஒரே
மந்தையில் கொண்டு சேர்ப்பீர் அன்பால்!
4. விரிந்துள்ள கரத்துடன் சிலுவையிலே
மேவிடும் உதிரம் சிந்தியன் பாலே
எரிந்திடும் இதயத்தைக் காட்டுகின்றீர் - ஆம்
இதனால் அன்பு தெரிகிறதன்றோ?
5. பீடத்தில் அப்பம் இரசகுணத்தில்
பிரியமாய் உறைவதும் இதனால் அன்றோ?
தேடும் மக்கள் எம்மீது - உம்
திருவருள் மீட்பைப் பொழிந்தருள்வீரே!
6. உலகத்தை ஆள்வோர் உமை ஏற்று
உவப்புடன் புகழ்க வெளிப்படையாக!
கலைகள் உம் அழகின் ஒளிவீசி - சட்டம்
காட்டுகவே உம் ஒழுங்குக ளெல்லாம்!
7. அரசர்கள் உமக்கே தமைப் பணிவாய்
அளிப்பதில் மகிமை பெறுவாராக!
நிரந்தரம் வீட்டையும் நாட்டையுமே - இன்பம்
நிலவும் ஆட்சிக் குவந்தளிக் கின்றோம்.
8. உலகின் அரசர் அனைவரினும்
உயர்ந்து விளங்கும் இயேசுவே உமக்கும்
நலம்நிறை தந்தைக்கும் ஆவிக்கும் - எந்த
நாளுமே மகிமை உண்டாகுகவே! - ஆமென்
களிப்புடன் கிறித்துவே! உமையேற்கின்றோம்
ஞாலத்தின் மன்னவர் நீரென்றும் - ஒரே
நாயகன் என்றும் உமையேற்கின்றோம்
2. வன்மனங் கொண்டவர் உமைத் தமது
மன்னவர் என்றிட மறந்தாலும் நீர்
உன்னத மன்னர் என ஏற்று - உமை
உளமகிழ் வோடு புகழ்ந்தார்ப்பரிப்போமாக
3. அமைதியின் அரசரே! கிறித்துவே!
ஆர்த்தெழும் மாந்தரை உமதாக்கிடுவீர்!
இமையெனக் காத்திடப் பிரிந்தவரை - ஒரே
மந்தையில் கொண்டு சேர்ப்பீர் அன்பால்!
4. விரிந்துள்ள கரத்துடன் சிலுவையிலே
மேவிடும் உதிரம் சிந்தியன் பாலே
எரிந்திடும் இதயத்தைக் காட்டுகின்றீர் - ஆம்
இதனால் அன்பு தெரிகிறதன்றோ?
5. பீடத்தில் அப்பம் இரசகுணத்தில்
பிரியமாய் உறைவதும் இதனால் அன்றோ?
தேடும் மக்கள் எம்மீது - உம்
திருவருள் மீட்பைப் பொழிந்தருள்வீரே!
6. உலகத்தை ஆள்வோர் உமை ஏற்று
உவப்புடன் புகழ்க வெளிப்படையாக!
கலைகள் உம் அழகின் ஒளிவீசி - சட்டம்
காட்டுகவே உம் ஒழுங்குக ளெல்லாம்!
7. அரசர்கள் உமக்கே தமைப் பணிவாய்
அளிப்பதில் மகிமை பெறுவாராக!
நிரந்தரம் வீட்டையும் நாட்டையுமே - இன்பம்
நிலவும் ஆட்சிக் குவந்தளிக் கின்றோம்.
8. உலகின் அரசர் அனைவரினும்
உயர்ந்து விளங்கும் இயேசுவே உமக்கும்
நலம்நிறை தந்தைக்கும் ஆவிக்கும் - எந்த
நாளுமே மகிமை உண்டாகுகவே! - ஆமென்