1484.இறைவனின் அன்பர்கள் அனைவருக்கும்
இறைவனின் அன்பர்கள் அனைவருக்கும் - அவர்
இனிய தம் ஆவியின் வழியாக
நிறைவுற வைத்துள்ள யாவையுமே - மனம்
நினைக்கவும், கண்கள் பார்த்திடவும்,
குறையறக் காதுகள் கேட்டிடவும் - தினம்
கூடுமோ? நமக்கு எடுத்துரைத்தார்
வறியவர் தந்தை; இதய ஒளி நிதம்
வருத்தத்தில் ஆறுதல், துயரில் பலம்.
2. உலகத்தில் இருப்பவர் யாவரினும் - நம்
உள்ளத்தில் உறைபவர் உயர்ந்தவரே!
நலம் தரும் துய ஆவியினால் - மீட்பின்
நாள்வரை முத்திரை இடப்பெற்றோம்
கலங்கிடச் செய்யும் ஆவியல்ல - அவர்
கருணையும் ஆற்றலும் கொண்டவராம்
துலங்கும் மகனின் ஆவியவர் - என்றும்
துணிந்தே ‘தந்தாய்’ என்றிடுவார்.
3. அவர் நம்மில் நிலைத்ததும் நாமறிவோம் - நாம்
அவரில் நிலைத்ததும் நாமறிவோம்
அவரே தம் ஆவியை நமக்களித்தார் - அவர்
அருளுக்கும் வாழ்வுக்கும் ஊற்றானார்
அவர் கொடை ஏழுக்கும் தந்தையானார் - உயர்
அறிவும் திருவும் தரலானார்
அவர்தம் சட்டம் நம் மனத்தில் உண்டு
அவரில் அனைவரும் வாழ்கின்றோம்.
4. அனைவரையும் நாம் அறிவதனால் - அங்கு
அறிமுகம் ஏதும் தேவையில்லை
மனிதரின் நடுவில் நம் வீட்டை - மிக
மகிழ்வுடன் இறைவன் அமைத்து விட்டார்!
அனைவரும் அவர்தம் மக்களாவர் - இனி
அவர்களின் இறைவன் அவராவார்
அனைத்தும் புதுமை ஆகிடுமோ - துயர்
அழுகை மரணம் ஏகிடுமோ
இனிய தம் ஆவியின் வழியாக
நிறைவுற வைத்துள்ள யாவையுமே - மனம்
நினைக்கவும், கண்கள் பார்த்திடவும்,
குறையறக் காதுகள் கேட்டிடவும் - தினம்
கூடுமோ? நமக்கு எடுத்துரைத்தார்
வறியவர் தந்தை; இதய ஒளி நிதம்
வருத்தத்தில் ஆறுதல், துயரில் பலம்.
2. உலகத்தில் இருப்பவர் யாவரினும் - நம்
உள்ளத்தில் உறைபவர் உயர்ந்தவரே!
நலம் தரும் துய ஆவியினால் - மீட்பின்
நாள்வரை முத்திரை இடப்பெற்றோம்
கலங்கிடச் செய்யும் ஆவியல்ல - அவர்
கருணையும் ஆற்றலும் கொண்டவராம்
துலங்கும் மகனின் ஆவியவர் - என்றும்
துணிந்தே ‘தந்தாய்’ என்றிடுவார்.
3. அவர் நம்மில் நிலைத்ததும் நாமறிவோம் - நாம்
அவரில் நிலைத்ததும் நாமறிவோம்
அவரே தம் ஆவியை நமக்களித்தார் - அவர்
அருளுக்கும் வாழ்வுக்கும் ஊற்றானார்
அவர் கொடை ஏழுக்கும் தந்தையானார் - உயர்
அறிவும் திருவும் தரலானார்
அவர்தம் சட்டம் நம் மனத்தில் உண்டு
அவரில் அனைவரும் வாழ்கின்றோம்.
4. அனைவரையும் நாம் அறிவதனால் - அங்கு
அறிமுகம் ஏதும் தேவையில்லை
மனிதரின் நடுவில் நம் வீட்டை - மிக
மகிழ்வுடன் இறைவன் அமைத்து விட்டார்!
அனைவரும் அவர்தம் மக்களாவர் - இனி
அவர்களின் இறைவன் அவராவார்
அனைத்தும் புதுமை ஆகிடுமோ - துயர்
அழுகை மரணம் ஏகிடுமோ