முகப்பு


1486.பாடுவாய் என் நாவே மாண்புமிக்க உடலின் இரகசியத்தை
பாடுவாய் என் நாவே மாண்புமிக்க உடலின் இரகசியத்தை
பாரின் அரசர் சீருயர்ந்த வயிற்றுதித்த கனியவர்தம்
பூதலத்தை மீட்கச் சிந்தும் விலைமதிப்பில் லாதுயர்ந்த
தேவ இரத்த இரகசியத்தை என்றன் நாவே பாடுவாயே

அவர் நமக்காய் அளிக்கப் படவே மாசில்லா கன்னியினின்று
நமக்கு என்றே பிறக்கலானார் அவனி மீதில் அவர் வதிந்து
அரிய தேவ வார்த்தையான வித்ததனை விதைத்த பின்னர்
உலகவாழ்வின் நாளை மிகவே வியக்கும் முறையில் முடிக்கலானார்

இறுதி உணவை அருந்த இரவில் சகோதரர்கள் யாவரோடும்
அவர் அமர்ந்து நயமனத்தின் உணவை உண்டு நியமனங்கள்
அனைத்தும் நிறைவு பெற்ற பின்னர் பன்னிரண்டு சீடருக்கு
தம்மைத் தாமே திவ்ய உணவாய்த் தம் கையாலே அருளினாரே

ஊன் உருவான வார்த்தை யானவர்
வார்த்தையாலே உண்மை அப்பம்
அதனை சரீரம் ஆக்கினாரே இரசமும் கிறித்து இரத்தமாகும்
மாற்றம் இது நம் மனித அறிவு முற்றிலும் கடந்த தெனினும்
நேர்மையுள்ளம் உறுதிகொள்ள மெய் விசுவாசம் ஒன்றே போதும்

மாண்புயர்இவ்வருளடையாளத்தைத் தாழ்ந்துபணிந்துஆராதிப்போம்
பழைய ஒழுங்கு முறைகள் அனைத்தும்இனி மறைந்து முடிவுபெறுக
புதிய ஒழுங்கு முறைகள் வருக புலன்களாலே மனிதர் இதனை
அறிய இயலாக் குறையை நீக்க நம்பிக்கையின் உதவி பெறுக

தந்தை அவர்க்கும் மகன் அவர்க்கும் புகழ்ச்சியோடு வெற்றியார்ப்பும்
மீட்பின் பெருமை மகிமையோடு வலிமை வாழ்த்து யாவும் ஆக
இருவரிடமாய் வருகின்றவராம் தூய ஆவி யானவர்க்கும்
அளவில்லாத சமப் புகழ்ச்சி என்றுமே உண்டாகுக - ஆமென்