முகப்பு


1505.இறைவனின் புனிதரே துணை நிற்க வருவீர்
இறைவனின் புனிதரே துணை நிற்க வருவீர் குரு : இறைவனின் புனிதரே, துணை நிற்க வருவீர்,
தேவனின் தூதரே, எதிர் கொண்டு வருவீர்!

எல் : இவர் ஆன்மாவை ஏற்றுக் கொண்டு
உன்னதர் திருமுன் ஒப்புக் கொடுங்கள்.

குரு : உம்மைத் தம்மிடம் அழைத்த கிறித்து
உம்மை ஏற்றுக் கொள்வாராக.
தூதரும் உம்மை ஆபிரகாமின்
மடியில் கொண்டு சேர்ப்பாராக!

எல் : இவர் ஆன்மாவை ஏற்றுக் கொண்டு
உன்னதர் திருமுன் ஒப்புக் கொடுங்கள்.

குரு : நித்திய இளைப்பாற்றியை ஆண்டவரே,
இவருக் கின்று அளித்திடுவீரே,
முடிவில்லாத ஒளி இவர்மேல் ஒளிர்வதாக

எல் : இவர் ஆன்மாவை ஏற்றுக்கொண்டு
உன்னதர் திருமுன் ஒப்புக் கொடுங்கள்