முகப்பு


1512.முடிவில்லாத வாழ்வைத் தேடி வருகிறேன் இறைவா
முடிவில்லாத வாழ்வைத் தேடி வருகிறேன் இறைவா
உன் முன்னிலையில் மண்டியிட்டுக் கிடக்கிறேன் இயேசையா - 2

1. நானே உயிர்தரும் ஊற்று என்ற
வார்த்தையின் பொருள் என்னவோ - 2
உம் ஊற்றில் பருகும் எனக்கென்றும்
இறப்பில்லையோ இருள் இல்லையோ தாகம் இல்லையோ

2. நானே உயிர்தரும் உணவு என்ற
வார்த்தையின் பொருள் என்னவோ - 2
உம் உடலை உண்ணும் எனக்கென்றும்
பசியில்லையோ துயர் இல்லையோ இறப்பில்லையோ