முகப்பு


1515.கல்லறை மேட்டினில் மனுக்குலம்
கல்லறை மேட்டினில் மனுக்குலம்
கண்ணீர் சிந்தும் காட்சியினை
கருணைக் கண்ணால் நோக்கினார்
கவலையை கர்த்தர் போக்கினார்

1. அன்று கல்லறை அருகினில் அவரும் கண்ணீர் விட்டழுதார்
துன்புறு மனிதர் கண்ணீரைத் துடைக்க அன்றே முன்வந்தார்

2. நானே உயிரும் உயிர்ப்புமாவேன் நம்புவோர் இதனை இறந்திடார்
என்றே உரைத்து இறந்தவனை எழுப்பி உண்மை அறிவித்தார்

3. மூன்று நாள்கள் கல்லறையை மூடிக்கிடந்த இருளகற்றி
முன்பே உரைத்த வாக்கின்படி மூவுலகாள்பரன் உயிர்த்து வந்தார்