முகப்பு


1487. கிறித்துவின் திரு உடல் திரு இரத்தத்தின் பெருவிழா
கிறித்துவின் திரு உடல் திரு இரத்தத்தின் பெருவிழா

1. இரக்கமுள்ள ஆண்டவர், தம் வியத்தகு செயல்களை நினைவுபடுத்தும்
படியாக தமக்கு அஞ்சி நடப்போர்க்கு உணவூட்டுகிறார்.

2. ஆண்டவர் தம் திருஅவையில் அமைதியை நிலைநாட்டியுள்ளார்.
செழுமையான கோதுமையினால் நம்மை உண்பிக்கிறார்.

3. உண்மையிலும் உண்மையாக நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்.
வானிலிருந்து உங்களுக்கு உணவு அருளியவர் மோசே அல்லர்,
வானத்திலிருந்து உங்களுக்கு உண்மையான உணவு அருள்பவர் என்
தந்தையே.

தியான வாக்கியம் : ஆண்டவரே, நீர் எத்துணை நல்லவர், எத்துணை
சா ந் த மு ள் ள வ ர். உ ம் இ னி ய ந ன்மை த் த ன த் தை உ ம து
பிள்ளைகளுக்குக் காட்ட வானின்று அதிமிகச் சுவையான அப்பத்தை
அளிக்கிறீர்; பசித்தோரை நலன்களால் நிரப்புகிறீர்; செருக்குள்ள
செல்வந்தரை வெறுங்கையராய்அனுப்புகிறீர்.