முகப்பு


1492.திருத்தூதர் திருவிழாக்கள்
திருத்தூதர் திருவிழாக்கள்

1. இயேசு தம் சீடர்களைத் தம்மிடம் அழைத்து, அவர்களுள்
பன்னிருவரைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்குத் திருத்தூதர் எனப்
பெயரிட்டார். அல்லேலூயா.

2. அவர் கள் தங்கள் உடைமைகளை விட்டுவிட்டுத் தங்கள்
ஆண்டவரும் மீட்பருமானவரைப் பின்சென்றனர். அல்லேலூயா.

3. நீங்கள் என் அன்பில் நிலைத்திருப் ப தால், நீங்கள் என்
நண்பர்கள். அல்லேலூயா.

தியான வாக்கியம் : நீங்கள் என்னைத் தேர்ந்து கொள்ளவில்லை.
நான்தான் உங்களைத் தேர்ந்து கொண்டேன்; நீங்கள் உலகில் சென்று
பலன் தரும்படியாகவும், அந்தப் பலன் நிலைத்திருக்கும் படியாகவும்
உங்களை ஏற்படுத்தினேன் அல்லேலூயா.

குரு : மன்றாடுவோமாக!

(அந்தந்தத் திருத்தூதருக்குரிய அவை மன்றாட்டைத் திருப்பலி
புத்தகத்திலிருந்து பாடவும்)