1463. மனத்துயர் மன்றாட்டு
என் இறைவனாகிய தந்தையே / நன்மை நிறைந்தவர் நீர். /
அனைத்திற்கும் மேலாக அன்புக்கு உரியவரும் நீரே. / என் பாவங்களால்
உமது அன்பைப் புறக்கணித்ததற்காகவும் / நன்மைகள் செய்யத்
தவறியதற்காகவும் / மனம் வருந்துகிறேன். / உமது அருள் உதவியால் /
இனிமேல் பாவம் செய்வதில்லை என்றும் / பாவத்துக்கு ஏதுவான
சூழ்நிலைகளை விட்டு விலகுவேன் என்றும் / உறுதி கூறுகிறேன் /
ஆமென்.