முகப்பு


1013.அம்மா அம்மா அன்பின் வடிவம் நீதானம்மா
அம்மா அம்மா அன்பின் வடிவம் நீதானம்மா
அருளைப் பொழிவதும் நீதானம்மா
ஆறுதல் அளிப்பதும் நீதானம்மா

1. மணிமுடி அணிந்த மாதவளே - இந்த
மாநிலம் காத்திடும் தூயவளே - 2
உண்மையை ஊட்டிடும் பேரழகே - 2 எந்தன்
உள்ளத்தில் நிறைந்திடும் நறுமலரே

2. துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே - நீ
துணை தந்து காத்திட வேண்டும் அம்மா - 2
அன்பினில் என்றுமே அரவணைத் தென்னை - 2
அருளினில் வளர்த்திட வேண்டும் அம்மா
1014.அம்மா அமுதினும் இனியவளே
அம்மா அமுதினும் இனியவளே
அமலியாய் உதித்தவளே அகமே மகிழ்வாய் மரியே - 2

1. தேவனாம் ஆண்டவரைப் பூவினில் ஈன்றவளே

அருளினிலே உறைந்தவளே அடியவர் நாவில் நிறைந்தவளே

2. அமலியாய் அவதரித்தாய் அலகையின் தலைமிதித்தாய்
அவனியிலே அருள்பொழிவாய் அடியவர் தாயாய் அமைந்திடுவாய்

3. அருள்நிறை மாமரியே அமல உற்பவியே
கறைபடா கன்னிகையே காத்திடுவாயே எம்மையே
1015.அம்மா உந்தன் அன்பினிலே
அம்மா உந்தன் அன்பினிலே
அருள்வாய் எமக்கு அடைக்கலமே - 2

1. இறைவன் படைத்த எழிலே எழிலே
இயேசுவைத் தந்த முகிலே முகிலே - 2
தூய்மை பொழியும் நிலவே நிலவே துணையே வாழ்வில் நீயே

2. புவியோர் எங்கள் புகழே புனிதம் பொங்கும் அழகே - 2
உம் மகன் புதிய உறவில் எம்மையும் வதியச் செய்வாய்
1016.அம்மா உந்தன் மாண்பு கண்டோம்
அம்மா உந்தன் மாண்பு கண்டோம்
அன்னை உன் திருத்தலத்தில்
வரும் அடியவர்க்கு தினம் தயை பொழிந்தாய் மாறா அன்பாலே

1. அமைதியைப்பொழியும்உன்திருமுகத்தைநாங்கள்காண்கையிலே - 2
சுமைகளை மறந்தோம் சுகம் பல அறிந்தோம் சுந்தரத் தாய் மரியே - 2

2. வாழ்வின் துயரம் சூழ்கையிலே வாடிய மலரானேன் - 2
வசந்தமாய்வந்தாய்வரம் பலதந்தாய்ஆரோக்கியத் தாய்மரியே - 2

3. அருள்நிறை மரியே வரம் தரும் கரமே உன் பதம் நாடுகிறோம் - 2
அருமைகள்அறிந்தோம்அடைக்கலம்அடைந்தோம்ஆதரிதாய்மரியே - 2
1017.அம்மா என்றேன் என் தெய்வமே அபயம் நீயல்லவா உயர்
அம்மா என்றேன் என் தெய்வமே அபயம் நீயல்லவா உயர்
அன்பால் கொண்ட நெஞ்சம் அதில்
நிறைந்த தாயல்லவா அழகே நீயல்லவா - 2
படரும் கொடியாய்த் தழுவினேன் ஆதாரம் உன் பாதமே - 2
வளர்வதோ மலர்வதோ அம்மா உன் திருவுள்ளமே

1. சேயின் குரலைக் கேட்டிட ஒரு தாய் வேண்டல் அல்லவா - 2
கனிந்து இதயம் உருகினேன் அருளை அருள வா - 2

2. சிறிய பறவை போல நான் உன் சிறகைத் தேடினேன்
சிவந்த மலரின் அரும்பு போல் உன் நிழலை நாடினேன்
ஒளியே வா நல்வழியே வா என் நெஞ்சில் நிறைந்து வா - 2
1018.அம்மா நீ தந்த செபமாலை
அம்மா நீ தந்த செபமாலை
செபிக்கும் நாளெல்லாம் சுபவேளை
அன்றாடம் ஓதி உயர்வடைந்தோம்
மன்றாடும் நலன்கள் உடனடைந்தோம்

1. சந்தோச தேவ இரகசியத்தில் தாழ்ச்சியும் பிறரன்புமாய் நின்றாய்
எம் தோசம் தீர இயேசுபிரான் உம் அன்பு மகனானார் அவரை
காணிக்கை வேண்டி புலம்பியதும் வீணாகவில்லை தாய்மரியே
உம் வாழ்வு எமக்கு முன்மாதிரியே

2. துயர்நிறை தேவஇரகசியத்தில் தூயவரின் வியாகுலங்கள் கண்டோம்
உயர் வாழ்விழந்த எமக்காக உன் மைந்தன் உயிர் தந்தார் அவரை
சாட்டைகளும் கூர் முள்முடியும் வாட்டிய சிலுவைப்பாடுகளும்
சாய்த்திட்டக் கோரம் பார்த்தாயம்மா
தாய் நெஞ்சம் நொறுங்கியதார் அறிவார்
1019.அம்மா மரியே சரணம்
அம்மா மரியே சரணம்
ஆரோக்கியத் தாயே சரணம் சரணம் சரணம் - 2

1. மங்கல மணிவிளக்கே சரணம்
மாந்தரில் மாணிக்கமே சரணம் - 2
பெண்களுள் சிறந்தவளே சரணம் - 2 எம்
பெருமான் இயேசுவின் தாயே சரணம்
2. தாழ்ச்சியில் உயர்ந்தவளே சரணம்
தியாகத்தின் காவியமே சரணம் - 2
மாட்சியை அடைந்தவளே சரணம் - 2 எம்
வாழ்வின் நல்மாதிரி நீயே சரணம்
1020.அம்மா மரியே வாழ்க அம்மா மரியே வாழ்க
அம்மா மரியே வாழ்க அம்மா மரியே வாழ்க
மரியே வாழ்க மரியே வாழ்க மாதா நீ வாழ்க - எங்கள்
மரியே வாழ்க மரியே வாழ்க மாதா நீ வாழ்க

1. அறியாத மாந்தருக்கு அறிய வைத்தாய் - உனை
ஆரோக்கியத் தாயாக உணர வைத்தாய்
மறையாத வான்நிலவாய் மாறாத வான்மழையாய்
திகழ்கின்ற திருமரியே நீ வாழ்க

2. உருகாத நெஞ்சமெல்லாம் உருகுதம்மா - உன்
அருகாமைக் காண இருள் விலகுதம்மா
உலகங்கள் கூறுகின்ற உன் அன்புப் பெருமைகளை
உன் சந்நிதியில் உணர்ந்து கொண்டோம் இந்நாளில்
1021.அமல உற்பவ தாய்மரி நீயே
அமல உற்பவ தாய்மரி நீயே - 2
உம்மைத்தேடி ஓடி வந்தோம்
எம்மை ஏற்பாய் அருள்மரியே - 2
அமல உற்பவ தாய்மரி நீயே

1. வேளை நகர்கொண்ட ஆரோக்கிய தாயே
ஏழு துறையெங்கும் பணிமயம் நீயே
தினமும் செபிக்கின்ற செபமாலை மரியே
உந்தன் பாதம் தேடி வந்தோம் - அமல உற்பவ

2. பாரில் துயர் நீக்கும் சகாய தாயே
பாவி என்னைத் தேற்றும் லூர்தம்மா நீயே
அகிலம் அரசாளும் அடைக்கல அன்னையே
உந்தன் பாதம் தேடி வந்தோம் - அமல உற்பவ
1022.அமலோற்பவியே அருள்நிறை தாயே வாழ்க வாழ்க
அமலோற்பவியே அருள்நிறை தாயே வாழ்க வாழ்க
மாசறு கன்னியே மாபரன் தாயே வாழ்க வாழ்க
வாழ்க தாயே வாழ்க நீயே வாழ்க வாழ்கவே
அன்னையே வாழ்க அமலியே வாழ்க வாழ்க வாழியவே

1. மாமரியே மாதவளே வாழ்க வாழ்க
மாந்தர்களைக் காப்பவளே வாழ்க வாழ்க - 2
மனம் மகிழ்ந்து பாடிடுவோம் வாழ்க வாழ்க
தினம் நினைந்து பாடிடுவோம் வாழ்க வாழ்க

2. இறைமகனின் திருத்தாயே வாழ்க வாழ்க
மறைபோற்றும் பேரெழிலே வாழ்க வாழ்க - 2
வான் மண்ணின் இராக்கினியே வாழ்க வாழ்க
வாழ்த்துகிறோம் போற்றுகிறோம் வாழ்க வாழ்க
1023.அருள் தரும் மாமரியே உம் அடைக்கலம் எந்தாளும்
அருள் தரும் மாமரியே உம் அடைக்கலம் எந்தாளும்
உன் பதம் நாடி உன் புகழ் பாடி
என்றுமே வாழ்ந்திடுவோம் நின் அருள் நீ தருவாய் - 2

1. இன்னல்கள் நிறைந்த இவ்வுலகினிலே
இருப்பதோ உனதுதுணையினிலே
மின்னல் போல் வாழ்வினிலே உன்னருள் வேண்டுமம்மா - 2
அன்னை எம்மை நிதமும் அரவணைப்பீரே
விண்ணின் மழை பெய்து விளைவுகள் மேலோங்க - 2
வேண்டினோம் மாதரசே - 2

2. தாயுடன் இருக்கும் சேய் மகிழும் தளிருடன் இருக்கும் பூ சிரிக்கும்
காலமெல்லாம் அருள் பொழிந்தே என்றுமே காத்திடுவாய் - 2
அன்னை எம்மை நிதமும் அரவணைப்பீரே
விண்ணின் மழை செய்து விளைவுகள் மேலோங்க - 2
வேண்டினோம் மாதரசே - 2
1024.அருள்நிறை மரியே வாழ்க ஆண்டவர் உம்முடனே
அருள்நிறை மரியே வாழ்க ஆண்டவர் உம்முடனே
பெண்களுள் சிறந்தவள் நீயே மாமரியே நீ வாழ்க
அன்னையே வாழ்க வாழ்க லூர்தன்னையே வாழ்க வாழ்க

1. வாழ்வில் கருணையாய் வந்திடுவாய் வறியவர் துயரம் தீர்த்திடுவாய்
உரிமையை இழந்து உழல்வோர்க்கு உலகம் காண வழிசெய்வாய்
உள்ளங்கள் இணைந்தே போராடும்
மனிதர்க்குத் துணையாய் நின்றிடுவாய் - 2
உறவில் மலரும் வாழ்வாக
உண்மை வழியைக் காட்டிடுவாய் அன்னையே

2. மனத்தினில் நம்பிக்கை வளர்த்திடுவாய்
மனிதம் காத்திட துணை செய்வாய்
உரிமைக் குரலாய் எழும்போது
அடிமைச் சிறையைத் தகர்த்திடுவாய்
விடியலுக்காகவே வாழ்ந்திடவே
விடுதலைத் தாயாய் அருகிருப்பாய் - 2
மண்ணில் மகத்துவம் கண்டிடவே
மாண்புடன் வாழ்ந்திட அருள் புரிவாய் அன்னையே
1025.அருள்நிறை மரியே வாழ்கவே ஆண்டவர் உம்முடனே
அருள்நிறை மரியே வாழ்கவே ஆண்டவர் உம்முடனே - 2
கன்னியர்க்கெல்லாம் உயர்ந்தவளே - உன்
நாமம் என்றும் வாழியவே

1. இசுரேல் குலத்தின் திருமகளே - நீ
ஆண்டவர் அடிமை என்றவளே - 2
தூய ஆவியால் இயேசுவை ஈன்றவளே - இந்த
அகிலத்தின் தாயும் ஆனவளே

2. பரமனை ஈன்றிடப் பேறுபெற்றாய் - அவர்
பார்புகழ் தேவனாய் உருக்கொடுத்தாய் - 2 இனி
அன்புடன் எமையும் ஏற்றருள்வாய் - எம்
அன்னையாய் நீயும் அரவணைப்பாய்
1026.அலைகடல் ஒளிர்மீனே செல்வ ஆண்டவர் தாயாரே
அலைகடல் ஒளிர்மீனே செல்வ ஆண்டவர் தாயாரே - 2
நிலைபெயராக் கன்னி மோட்ச நெறிக்கதவே வாழி - 2

1. வானவன் கபிரியேலின் - தூத்ய
மங்கள மொழி ஏற்பாய் - 2
ஞான சமாதான வழி நாம் நடந்திட தயை செய்வாய் - 2

2. பாவ விலங்கறுப்பாய்க் - குருடர்
பார்த்திட ஒளி கொடுப்பாய் - 2
சாவுறுந் தீமையெல்லாம நீக்கி சகல நன்மை அளிப்பாய் - 2
1027.அலைகடலின் ஓசையிலே அன்புமொழி கேட்குதம்மா
அலைகடலின் ஓசையிலே அன்புமொழி கேட்குதம்மா
அன்னையவள் ஆலயத்தில் அருள் நிறைந்து காணுதம்மா

1. நொண்டி முடம் கூன் குருடு நோய்களெல்லாம் தீர்ந்திடவே
அண்டி வந்த அனைவருக்கும் அருள்வழங்கும் அன்னையம்மா

2. கண்கவரும் ஆலயமும் காணிக்கைப் பொருளறையும்
எண்ணில்லாக் கவிதைகளை என்றென்றும் கூறுதம்மா

3. வேளைநகர் திருத்தலத்தில் வீற்றிருக்கும் அன்னையிவள்
வேண்டும் வரம் தந்திடுவாள் வேதனைகள் தீர்த்திடுவாள்
1028.அலையொளிர் அருணனை அணிந்திடுமா
அலையொளிர் அருணனை அணிந்திடுமா
மணிமுடி மாமரி நீ - 2
வாழ்க்கையின் பேரரசி வழுவில்லா மாதரசி - 2
கலையெல்லாம் சேர்ந்தெழு தலைவியும் நீயல்லோ
காலமும் காத்தருள்வாய்

1. அகால வேளையிலே அம்மா உன் கருணையாலே - 2
பொல்லாத கூளியின் தொல்லைகள் நீங்கிட
வல்ல உன் மகனிடம் கேள்

2. அகோரப் போர் முழங்கி அல்லலும் தோன்றுதன்றோ - 2
எல்லோரும் விரும்பிடும் நல்லதோர் அமைதியை
சொல்லாமல் அளித்திடுவாய்
1029.அழகின் முழுமையே தாயே
அழகின் முழுமையே தாயே
அலகையின் தலைமிதித்தாயே
உலகினில் ஒளி ஏற்றிடவே அமலனை எமக்களித்தாயே - 2

1. இருளே சூழ்ந்திடும் போதே உதயதாரகை போலே - 2
அருளே நிறைந்த மாமரியே அருள்வழி காட்டிடுவாயே - 2

2. அன்பும் அறமும் செய்வோம் அன்னை உனைப் பின்செல்வோம் - 2
உன்னைத் துணையாய்க் கொள்வோம்
என்றும் பாவத்தை வெல்வோம் - 2
1030.அழகோவியமே எங்கள் அன்னை மரியே
அழகோவியமே எங்கள் அன்னை மரியே
உயிரோவியமே எங்கள் உள்ளம் கவர்ந்தவளே - 2
உன் பார்வை சொல்லும் கருணையும் பாதமலரின் அருமையும்
அழகே அழகே எங்கள் அம்மா நீ அழகே

1. கோடான கோடி மக்கள் குறைகளைத் தீர்ப்பவளே
கொள்ளை அழகோடு எங்கள் ஆலயம் அமர்ந்தவளே
அம்மா நீ தேரினிலே பவனி வரும் போதினிலே
ஒய்யாரமாக மனம் ஊர்வலம் போகிறதே
யாரும் இல்லா ஏழை எங்கள் தஞ்சம் நீயே தாயே
உம்மை நம்பி வந்தோம் இங்கு உள்ளங்கள் எல்லாம் தந்தோம்
உந்தன் முகத்தைப் பார்க்கும் போது உள்ளம் மகிழுதே
உந்தன் நாமத்தைச் சொல்லும் போது நெஞ்சம் இனிக்குதே

2. ஆதாரம் நீயே என்று அண்டி வருவோர்க்கு எல்லாம்
ஆதரவு தருபவளே வேளாங்கண்ணித் தாய் மரியே
அம்மா உன் காட்சி எல்லாம் ஏழைகளின் பாக்கியமே
எந்நாளும் இவர்களுக்கு உதவிடும் உம் திருக்கரமே
கண்ணின் மணியைப் போலே எம்மைக் காத்திடும் தெய்வத்தாயே
மண்ணின் மைந்தர்கள் நாங்கள் உந்தன் பாதம் பற்றியே வந்தோம்
இன்னும் ஒருமுறை என் தாயே நீ இந்த உலகினில் பிறந்தால்
ஏழை எளியவர் உம்மோடே இங்குப் புது உலகம் படைப்பார்
1031. அழியா ஓவியமே ஆண்டவன் நல் படைப்பே
அழியா ஓவியமே ஆண்டவன் நல் படைப்பே
அருள் நிறை மரியே அடைக்கலம் நீயே
அகிலத்தைக் காப்பாயே

1. ஆகட்டும் என்று நீர் மொழிந்தீர்
அன்பரின் தூய தாயானீர்
ஆண்டவர் திருவுளம் ஏற்றுக் கொண்டீர்
அகிலத்தை மீட்க வழிவகுத்தீர்
என் வாழ்வில் ஆகட்டும் சொல்ல
உம் மகனை ஏற்று வாழ
தினமும் மன்றாடும்
1032.அன்பார்ந்த மாந்தரே கூடுங்களே
அன்பார்ந்த மாந்தரே கூடுங்களே
ஆரோக்கிய மாதாவைப் பாடுங்களே - 4

1. கீதங்கள் அவள் பெயரைச் சொல்லட்டுமே
நாதங்கள் எங்கெங்கும் ஒலிக்கட்டுமே - 2
மண்ணாளும் மாதாவை வாழ்த்தட்டுமே
மரியாளின் புகழ்கூறிப் போற்றட்டுமே - 2
முப்பொழுதும் அவள் கன்னியம்மா
எப்பொழுதும் நம் அன்னையம்மா

2. வானோர்கள் அறிந்திட்ட அற்புதமே
வேதங்கள் அறியாத தத்துவமே - 2
தேவாதி தேவனின் தாயகமே
திருமறை போற்றிடும் நாயகமே - 2 முப்பொழுதும்
1033.அன்பின் வடிவான அன்னை
அன்பின் வடிவான அன்னை
நெஞ்சில் எனைத் தாங்கும் அன்னை
வஞ்சம் பகை சூழ்ந்து தடுமாறும் போதும்
தஞ்சம் என்றான அன்னை - 2

1. பூமி எங்கெனும் சீவஓசையின்
ஆதிதாளமும் அன்னை என்பதே
தேவகாவியம் பூமி வந்ததும்
அன்னை அன்பிலே அன்னை அன்பிலே
பாசம் கோடி என் ஆசை நீதானம்மா
நெஞ்சில் எனைத் தாங்கி நான் கண்ட செல்வம் நீயே
நேசம் தந்தாயம்மா சா சா பா பநி சக ரீ எந்நாளும் நீதானம்மா
பாசம் பல கோடி நெஞ்சில் எனைத் தாங்கி
நேசம் தந்தாயம்மா எந்நாளும் நீதானம்மா
ஆசை வானங்கள் தேடும் பேதை நானாகினேன்
காசு போல வந்து போகும் வாழ்வில் என்றும்

2. ஆயிரம் குறை ஆன போதிலும்
அன்னை அன்புதான் அளவில் மாறுமோ
இன்று போலவே எந்த நாளுமே
உந்தன் அன்பிலே உந்தன் அன்பிலே
பாதை பலவாகும் நான் எங்குச் செல்வேனம்மா
கால்கள் திசைமாறும் உன் பாதை நான் வேண்டினேன்
உன்னை மறவேனம்மா சா சா பா பநி சக ரீ
எந்நாளும் நீதானம்மா
பாதை பலவாகும் கால்கள் திசைமாறும்
உன்னை மறவேனம்மா எந்நாளும் நீதானம்மா
எண்ணம் பலவான போதும் உன்னை மறவேனம்மா
காசு போல வந்து போகும் வாழ்வில் என்றும்
1034.அன்று சிலுவையிலே நீ சிந்திய கண்ணீர்
அன்று சிலுவையிலே நீ சிந்திய கண்ணீர்
இன்று புவியெல்லாம் நீள்கடலாய் ஆனதம்மா
ஒன்றுதான் தெய்வமென உலகிற்குக் காட்டிடவே
இறைவனைக் குழந்தையாய் இடையில் சுமந்தவளே
கத்தும் அலைகடல் ஓரத்திலே
அன்புத்தாங்கியே வந்தவளே - 2
சித்தம் இரங்கியே வேளைநகர் வந்தே
ஆரோக்கியம் தந்தவளே அம்மா - 2

1. வித்தகன் இயேசுவைப் பெற்றவள் நீயே
உத்தமர்க்கெல்லாம் நீ உற்றவள் தாயே - 2
சத்திய சன்மார்க்கம் தழைக்கச் செய்தாயே - 2
இத்தரை மேல் இன்னல் தீர்ப்பவள் நீயே
இத்தரை மேல் இன்னல் தீர்ப்பவள் நீ

2. நித்தம் உன் தாள் தேடி வருவார்கள் கோடி
நெஞ்செல்லாம் இனித்திடும் சுவையாகப் பாடி - 2
முக்திக்கு வழிசொன்ன இறைமகன் தாயே - 2
சத்தியம் வழிந்தோடும் நிறைகுடம் நீயே
சத்தியம் வழிந்தோடும் நிறைகுடம் நீ
1035.அன்னை உன் பாதத்தில் அமர்ந்திடும் வேளை
அன்னை உன் பாதத்தில் அமர்ந்திடும் வேளை
அல்லல்கள் யாவும் தீருதம்மா
என்னை நீ தாலாட்டி அமர்ந்திடும் வேளை
பிள்ளை என் உள்ளம் மகிழுதம்மா - 2

1. சோகத்தின் இரேகைகள் சுடுகின்ற போது
சேதங்கள் தீண்டாமல் கரை சேர்க்கிறாய் - 2
பாதங்கள் தடுமாறி பயில்கின்ற போது
படியேற என்னோடு கரம் கோர்க்கிறாய்
தாயே நீதான் எந்தன் வாழ்வாகிறாய்

2. நிசமென்று எண்ணிய நேசங்கள் கூட
நிறம் மாறும் போது நிறை செய்கிறாய் - 2
உயிரான உறவுகள் பிரிகின்ற போது
உயிரோடு கலந்து நீ குறை தீர்க்கிறாய்
உயிரே நீதான் எந்தன் உறவாகிறாய்
1036.அன்னைக்குக் கரம் குவிப்போம் அவள்
அன்னைக்குக் கரம் குவிப்போம் அவள்
அன்பைப் பாடிடுவோம் - 2

1. கன்னிமையில் இறைவன் உருக்கொடுத்தார் - அந்த
முன்னவனின் அன்னை எனத் திகழ்ந்தாள் - 2
மனுக்குலம் வாழ்ந்திடப் பாதை படைத்தாள் - 2
தினம் அவள் புகழினைப் பாடிடுவோம்

2. பாவமதால் மனிதன் அருள் இழந்தான் - அன்று
பாசமதால் அன்னைக் கருணை கொண்டாள் - 2
பாரினில் வாடினோர் வாழ்வு கண்டார் - 2
பாரினில் அவள் புகழ் பாடிடுவோம்

3. அன்னைமரி உலகில் வாழ்ந்த வழி - நாம்
சென்றிடுவோம் அதுவே சிறந்த வழி
நல்வழி நாடிடும் யாவரும் இன்று
நல்வழி கண்டிடச் செய்திடுவோம்
1037.அன்னை மரியாம் மாதாவுக்கு மங்களம் பாடிடுவோம்
அன்னை மரியாம் மாதாவுக்கு மங்களம் பாடிடுவோம்
நாம் இந்த வேளையில் ஒன்றாய்க் கூடி வாழ்த்திப் போற்றிடுவோம்

1. அருள் நிறைந்த அம்மணி அகிலலோக நாயகி - 2
ஆண்டவனின் அன்புத்தாயும் நீ
எங்கள் அன்னையே - 2 காத்திடும் எங்கள்

2. அமல உற்பவம் நீ அன்றோ அடைக்கலமும் நீ அன்றோ - 2
அகிலம் ஆளும் தேவதாயும் நீ
எங்கள் அன்னையே - 2 காத்திடும் எங்கள்
038.அன்னை மாமரி எங்கள் அன்பின் தாய்மரி
அன்னை மாமரி எங்கள் அன்பின் தாய்மரி
என்றும் உந்தன் புகழைப் பாடுவோம்
தேடும் மாந்தரைத் தேடிக் காத்திடும்
உந்தன் அருள் வரங்கள் இன்று தேடினோம் - 2

1. எண்ணிறந்த உதவிகளைப் பெற்றுத் தந்த நீ
எங்கள் வாழ்வில் உடனிருந்து காத்து வருகின்றாய் - 2
நன்றிப் பூக்கள் ஒன்று சேர்த்தோம் உந்தன் பாதத்தில்
சகாயத் தாய்மரியே - எம்மை
அரவணைத்துக் காப்பாய் நீயே

2. அண்ணல் இயேசு அன்பு வழியைக் கற்றுத் தந்த உன்
அன்புமிகு ஆதரவில் அச்சம் நீங்குதே - 2 - நன்றிப்
1039.அன்னையாய் அருளமுதாய் நல் ஆசானாய்
அன்னையாய் அருளமுதாய் நல் ஆசானாய்
அருமருந்தாய் விண்ணவர்க் கரசியாய்
மண்ணில் உயிர்க்கெல்லாம் மாதாவாய்
மாசிலாக் கன்னியாய் கர்த்தரை ஈன்ற தவமே
தவத்தின் உருப்பயனே என் தாயான அம்மா - 2
வண்ண வண்ண லீலி மலர்
அன்னைமரி நீயே ஆரோக்கியத் தாயே
கன்னல் சுவை தேனமுதே கன்னிமரியாயே - 2
தன்னை இந்தப் புவிக்களித்த இறைவன் திருமகன் உன்னை
தாயாக ஆசி தந்தான் தான் பிறக்கும் முன்னே - 2

1. அள்ள அள்ளக் குறையாத ஆழியம்மா உனதுள்ளம்
தெள்ளுதமிழ் காவியமாய் தித்திக்கும் கருணை வெள்ளம் - 2
வள்ள லம்மா எங்களையே வாழவைக்கும் தாய் அம்மா
எல்லை யில்லா பேரின்பத்தின் எழில் வாசல் திருவிளக்கே - 2

2. தாளாத நோய்க் கொடுமைக் காளாகித் தவித்து நின்றோம்
கோடான கோடி மக்கள் குறைகளைத் தீர்ப்பவளே - 2
வேளாங்கண்ணி யமர்ந்த வேதநாயகன் தாயே
ஆதாரம் நீர் துணையே ஆரோக்கிய மாமரியே - 2
1040.அன்னையின் அருட்திரு வதனம் கண்டால் நம்
அன்னையின் அருட்திரு வதனம் கண்டால் நம்
அல்லல்கள் அகன்று விடும் - அவள்
கண்களில் மின்னிடும கருணையைக் கண்டால்
கவலைகள் மறைந்து விடும்

1. வாடா லில்லியும் வாழ்த்திப் பாடிடும்
தூய்மை தான் அவள் தோற்றம் - இன்று
தேடா மானிடர் யாருளர் தரணியில்
பாடார் அவள் ஏற்றம் - 2

2. பொன் தாள் வெண்ணிலா தாங்கிட வதனம்
பொலிவால் திகழ்ந்தோங்கு - இன்று
செந்நீர் பாய்ச்சிய கரங்களில் எம்மை
எடுத்தே அரவணைக்கும் - 2
1041.அன்னையே ஆரோக்கியத்தாயே அருட்கடலே அம்மா
அன்னையே ஆரோக்கியத்தாயே அருட்கடலே அம்மா
தன்னையே தந்துலகைத்தான் மீட்க வந்தவராம்
மன்னவராம் ஆண்டவரை மகனாகத் தந்தவளே
உன்னையே நம்பி வந்தேன் உற்றதுணை செய்யம்மா
அம்மா தேவனின் தாயே அருளமுதான கடலே - 2
துணை செய்வாய் நீயே ஆரோக்கியத் தாயே - 2

1. எம்மான் இயேசுவைத் தந்தவள் நீயே
எங்கள் நலம் காக்க வந்தவள் நீயே - 2
உம்மால் ஆகாத செயலில்லை தாயே - 2
உலகத்தின் அன்புக்கு எல்லையும் நீயே

2. பிறைசூடும் உன்பாதம் கண்ணீரால் நனைத்தேன் - 2
மறைதந்த மகனிடம் சொல்ல நான் அழைத்தேன் - 2
கரையில்லா கடலான அன்புக்கு வித்தே
கருணையின் மெழுகான கடவுளின் முத்தே
1042.அன்னையே ஆரோக்கிய அன்னையே
அன்னையே ஆரோக்கிய அன்னையே
அழகுள்ள வேளையில்
ஆலயம் கொண்ட எங்கள் அன்னையே - 2

1. கடலின் அலைகள் காவியம் பாடும்
கார்முகில் கூட்டம் கருணையைக் கூறும் - 2
மடல்விரி தாழையும் மணமது வீசும் - 2
மாதா உந்தன் மகிமையைச் சொல்லும்

2. பன்னிரு விண்மீன் முடியினைக் கொண்டாய்
பாதத்திற் கணியாய் நிலவினைப் பதித்தாய் - 2
உன்னிரு கரங்களில் உலகத்தின் ஒளியாம் - 2
உத்தமர் இயேசு பாலனைக் கொண்டாய்
1043.அன்னையே உந்தன் ஆதார பந்தம் என் சொந்தம்
அன்னையே உந்தன் ஆதார பந்தம் என் சொந்தம் - இனி
என்றும் உந்தன் தஞ்சம் - அருள்
பொங்கும் அன்பு சிந்தும் - 2 அன்னையே

1. தத்தம் சம்பூரண ராணியே நித்தம் அருள் ஊறும் கேணியே
சித்தம் பணிந்த நல்மாமரியே ஆ - 2
தூய மங்கள வாழ்த்தினைப் பெற்றவர் என்

2. ஏக புவனத்தின் சோதியே எண்ணில்லா அழகு தேவியே
திங்களைத் தேய்த்த பொற்பாதமே ஆ - 2
திவ்ய பனிமய இராக்கினியே
1044.அன்னையே எங்கள் பனிமயத் தாயே
அன்னையே எங்கள் பனிமயத் தாயே
உம்மையே என்றும் சரணடைந்தோமே - 2
எம்மையே என்றும் ஆதரிப்பாயே கடவுளின் தாயே - 2

1. இறைசித்தம் நிறைவேற்ற மனத்தினில் வைத்தாயே
இறைவனையே மகனாக ஈன்றெடுத்தாயே - 2
ஆண்டவனின் அடிமையென தாழ்ந்து நீ நின்றாயே - 2
அருள் நிறைந்த மாது என உயர்வடைந்தாயே

2. உலகிற்கு மீட்பதனைக் கொண்டு வந்தாயே
உத்தமனாய் இயேசுவையே தந்து நின்றாயே - 2
இடிதாங்கி பனிபொழிந்து புதுமைகள் செய்தாயே - 2
மனுக்குலத் தாயாக வரம் நீர் அடைந்தாயே
1045.அன்னையே தாயே ஆரோக்கிய மாதாவே
அன்னையே தாயே ஆரோக்கிய மாதாவே
அம்மா உன் அருட்கரங்கள் உலகை
அணைக்கத் துடிப்பது போல் உன் திருக்கொடிதான் வானில்
எழில் திகழ்ந்திடவே பறக்குதம்மா திசையெல்லாம் மக்களை
வருக வருகவென அழைக்குதம்மா
ஞாலத்தைப் படைத்த தேவனின் தாயே
உன் திருக்கொடி வானில் பறக்குதம்மா
கோலவிழாவின் சிறப்பினைக் கூறி
அசைந்தாடி மக்களை அழைக்குதம்மா

1. தன்னை உலகுக்குத் தந்திட்ட தேவனின்
தாயே உந்தன் நிழல் தேடி
அன்னையே ஆரோக்கிய மாதாவே உன்னை
அண்டியே வந்தவர்கள் பல கோடி
வையத்து மாந்தர்கள் துயரம் தீர்த்திட உற்றவள் நீயல்லவா
ஐயன் இயேசுவைத் திருவயிற்றில் சுமந்து
பெற்றவள் நீயல்லவா - 2

2. ஆழியின் கரையோரம் அமர்ந்தவளே - அம்மா
அருள்மழை பொழிந்திடத் தெரிந்தவளே
ஊழிவாழ் வரை உன் நாமமே வாழி
வேளைமா நகர் வாழ் மரியே வாழி
1046.ஆண்டவரை எனதுள்ளம் பெருமைப்படுத்திடுதே
ஆண்டவரை எனதுள்ளம் பெருமைப்படுத்திடுதே - 4

1. கடவுளை நினைத்து எனது மனம் பேருவகை கொள்கிறது
ஏனெனில் அவர்தம் அடிமையின் தாழ்நிலை கண்ணோக்கினார்

2. இதுமுதல் எல்லாத் தலைமுறை என்னைப் பேறுபெற்றவள் என்பாரே
வல்லவராம் கடவுள் எனக்கு அரும்பெரும் செயலைச் செய்துள்ளார்

3. அவருக்கு அஞ்சி நடப்போர்க்கு இரக்கம் காட்டி வருகின்றார்
தாழ்நிலை இருப்போரை உயர்த்துகிறார் பசித்தோரை நிரப்புகிறார்
1047.ஆரோக்கியத் தாயே அம்மா அம்மா
ஆரோக்கியத் தாயே அம்மா அம்மா
உந்தன் அருட்பதம் நாடிவந்தேன்
மயங்கிடும் மனத்தினில் மரியே என் அன்னையே
இறை அருள் நிறையச் செய்வாய் - 2

1. சங்கீதம் பொங்கும் சந்தோச வேளையிலே
பொங்கும் மனம் தினம் கொண்டாடும் மாதவமே - 2
உன்னைத்தான் நம்பித்தான் உலகத்தை உனக்களித்தான்
தேவன் வியந்தான் மகிழ்ந்தான் உன் பெருமை எண்ணித்தான்

2. உள்ளம் முழுவதும் நீ தந்தாயே தேவனுக்கு
வெள்ளம் போலே அருள் தந்தாளும் தாரகையே - 2
எண்ணில்லா நெஞ்சங்களை இறைவனின் பதம் கொணர்ந்தாய்
இறை நிழலாய் நினைவாய் என் வாழ்வில் வருவாய்
1048.ஆரோக்கியத் தாயே ஆதாரம் நீயே
ஆரோக்கியத் தாயே ஆதாரம் நீயே - 2
தீராத துயர் போக்கும் மரியே எம் பரிவே
ஆரோக்கியத் தாயே ஆதாரம் நீயே
மரியே வாழ்க அம்மா மரியே ஆரோக்கியத் தாயே

1. தீராத போராட்ட வாழ்க்கை - எங்கள்
திகில் போக்க வரவேண்டுமே
கரை சேராத ஓடங்கள் ஆனோம் - எம்மைச்
சிறை மீட்க வர வேண்டுமே - 2
வேறெங்குப் போவோம் வினை தீர வேண்டி
நீரெங்கள் நிறைவான தயவானதாலே

2. உனை நம்பி வந்தோருள் யாரும் - இங்கு
ஏமாந்த கதை இல்லையே - எங்கள்
தாயுன்னை தினம் போற்றும் நெஞ்சில்
ஒரு துளியேனும் துயர் இல்லையே - 2
விடியாத வாழ்வின் விடிவெள்ளியாக
விளங்கும் எம் தாயே உன் துணை வேண்டினோம்
1049.ஆரோக்கிய மாதாவே உமது புகழ்
ஆரோக்கிய மாதாவே உமது புகழ்
பாடித் துதித்திடுவோம் - எந்நாளும்
பாடித் துதித்திடுவோம் - 2

1. அலைகள் மோதிடும் கடற்கரை தனிலே
வசித்திட ஆசை வைத்தாயே - 2
பலவிதக் கலைகளும் பாரில் சிறந்திட
அனைவருக்கும் துணை புரிந்தாயே - 2

2 கவலையினால் மனம் வருந்தும் ஏழைகளின்
கண்ணீரைத் துணிவுடன் துடைத்தாயே - உமது
நன்னாளில் வந்து தானங்கள் செய்பவர்
உன்னத நிலைபெற வைத்தாயே
1050.ஆவே கீதம் பாடியே உன் புகழைப் பாடுவேன்
ஆவே கீதம் பாடியே உன் புகழைப் பாடுவேன் - உன்
அன்பின் பெருமை அகிலம் விளங்கும்
மாண்பைப் போற்றுவேன் - 2 ஆவே ஆவே ஆவே - 2

1. பாவிகளின் ஆதரவே பாருலகோர்க்கொளியே - 2
அன்பின் தாய் நீயே எம் குரல் கேளம்மா - 2 ஆவே

2. தாயெனவே யாம் அழைப்போம் தாயன்பில் வாழுவோம் - 2
மாய உலகினில் காத்திடுவாய் அம்மா - 2 ஆவே
1051.இடைவிடா சகாயமாதா இணையில்லா தேவமாதா
இடைவிடா சகாயமாதா இணையில்லா தேவமாதா
பாவவினை தீர்ப்பாள் பதமுனை சேர்ப்பாள்
நிதம் துணை சேர்ப்பாளே - 2

1. ஆறாத மனப்புண்ணை ஆற்றிடுவாள் - அன்னை
தீராத துயர் தன்னைத் தீர்த்திடுவாள் - 2
மாறாதா கொடுமை நீங்காத வறுமை
தானாக என்றுமே மாற்றிடுவாள் - 2

2. கள்ளம் கபடின்றி கடுகளவும் பயமின்றி
உள்ளம் திறந்து சொல் உன் கதையை - 2
வெள்ளம் போல் அருள்கருணை பாய்ந்திட
தேனூறும் வான்வாழ்வு கண்டிடுவாய் - 2
1052.இதயம் மகிழுதம்மா துயர் கறைகள் மறையுதம்மா
இதயம் மகிழுதம்மா துயர் கறைகள் மறையுதம்மா
உள்ளமும் துள்ளுதம்மா - உந்தன்
தாய்மையின் நினைவாலே அம்மா

1. தாயெனும் போதினிலே - மனம்
தானுனைத் தேடுதம்மா - 2
ஈன்ற தாயும் போற்றும் உந்தன்
பாதம் பணிந்திடுவேன் அம்மா

2. வாழ்வெனும் பாதையிலே - ஒளி
விளக்காய் நீ இருப்பாய்
உண்மை மனதும் உயர்ந்த நெறியும்
நிறைந்து புகழ்ந்திடுவேன் அம்மா
1053.இந்தப் பூவிலே ஒரு காலத்தில்
இந்தப் பூவிலே ஒரு காலத்தில்
தனம் தேடும் நோக்கத்தில் திசை போகும் நாளில்
நீ காமரா போர்ச்சுகீசு தேசத்தார்
கடல் பயணம் செய்தார்கள் சந்தோசமாய் - 2
சொல்லொணாததாய்ப் புயலும் வீச
காணுணாததாய் இருளும் சூழ
மூழ்கவே கப்பலும் அந்தோ மடிந்தோமென்று
தஞ்சம் தனைத் தேடினர் - குளோரியா
அன்னை தஞ்சம் தனைத் தேடினர் - குளோரியா

1. அன்னையைத் தாம் நினைந்தே மாலுமிகள் அழுதார் - 2
பிழைப்போமேல் உமக்காய்
ஒரு கோயிலை செய்வோமென்றார் - 2
மாதாவாம் மேரியின் உன்னத அருளால் - 2
கரை சேர்ந்திட நொடியில் கண்டார் - சொல்லொணாததாய்

2. மீண்டவர் யாவருமே மேரிய மாதாவை - 2
கண்டு வணங்கினர் தாம்
மேலும் நன்றி நவின்றனர் தாம் - 2
மாதாவாம் மேரியின் திருசந்நிதியை - 2
அவராலயமாகப் பணிந்தார்
1054.இராச கன்னி மரியே விண் இராசனின் தாய் நீயே
இராச கன்னி மரியே விண் இராசனின் தாய் நீயே
எம் இராணியும் நீ மரியே

1. நாள்பல அகன்று சென்றோமே
தாள் பதம் மறந்து நின்றோமே
ஆட்கொள்ளும் அன்னை என வந்தோம்
எமக்காதர வளித்தருள் வாயே

2. அருள் ஒளி அகத்தினில் கொண்டோம்
பொருட்செல்வம் பெருகிடக் கண்டோம்
இருள் எம்மில் புகுந்து இன்று
வல்ல இறையன்பு இழந்ததும் பாராய்
1055.இறைவனின் அன்னையே எங்களின் தாயே
இறைவனின் அன்னையே எங்களின் தாயே
இறையருள் பெற்றுச் செல்ல வந்தோம்
எங்கள் குறைகளை நிறைவாக்கி பகைமையை உறவாக்கி
வேண்டும் வரங்கள் பெற்றுத் தருவாய்
பொற்பை நகர் காவலே திருக்கல்யாண மாதாவே - 2

1. எங்கள் குறை கேட்டுத் தாழ்ச்சி வழிநின்று
மண்ணின் கடவுளின் பேழையானாய்
ஏழை எளியவரின் உரிமை வாழ்வுக்காய்
புரட்சிப் பாடலொன்று நீ இசைத்தாய்
திருமண விருந்தில் அதிசயம் நிகழவே
கலங்கிய எலிசபெத் மனத்திடம் அடையவே
உடனிருப்பவளே உதவிசெய்பவளே
எங்களின் கண்ணீரைத் துடைக்க வேண்டுமம்மா - பொற்பை

2. ஆணும் பெண்ணுமாய் இணைந்து வாழ்வதும்
இறை தந்த திருமண திருவருட்சாதனம்
தவழும் மழலையின் உதிக்கும் புன்னகையும்
பாலை மனங்களுக்குப் புதுச் சோலையாகும்
ஏங்கும் இதயங்களின் ஆறுதல் நீயே
விரியும் கரங்களுக்குப் புகலிடம் நீயே
உடனிருப்பவளே உதவிசெய்பவளே
எங்களின் கண்ணீரைத் துடைக்க வேண்டுமம்மா - பொற்பை
1056.இறைவனைப் புகழ்கின்றதே என் ஆன்மா
இறைவனைப் புகழ்கின்றதே என் ஆன்மா
மீட்பராம் கடவுளில் மகிழ்கின்றதே - 2

1. அவரது கடைக்கண் பார்வை ஒன்றே
அடிமை என்னை உயர்த்தியது
அகிலம் போற்றும் அருஞ்செயல் செய்து - 2
தலைமுறை எல்லாம் போற்றிடச் செய்த
வல்ல தேவன் பரிசுத்தரே

2. ஆண்டவர் தமது வலிமையைக் காட்டுவார்
செருக்கு கொண்டோரைச் சிதறடிப்பார்
அரியணை நின்று வலியோரை அகற்றி - 2
செல்வரை வெறுங்கையராய் அனுப்பிடுவார்
அந்த வல்ல தேவன் பரிசுத்தரே

1057.இன்னிசை பாடியே வாழ்த்துவோமே
இன்னிசை பாடியே வாழ்த்துவோமே
இறைமகனின் அன்னையைப் போற்றுவோமே
தஞ்சமே என் தாயென வேண்டுவோமே
தரணியர் தாம் ஒன்று சேர்ந்து பாடுவோமே

1. ஆயிரம் நாவுகள் வேண்டுமம்மா உன் புகழ் பாட
கண்கள் இரண்டும் போதாதம்மா உன் எழில் காண
அன்புத் தெய்வமே உன் வழி நானென்று
கலங்கித் தவித்த மனிதருக்கு மீட்பரைத் தந்தாய்

2. மாந்தர்களுள் ஆசி மிகப் பெற்றவள் நீரே
மாந்தர் எங்கள் குறைகளை
உம் பதம் வைத்தோம்
இறைமக்கள் இவர் சொல்வதுபோல் செய்யுங்கள் என்ற
இறைவழியில் நடந்து உந்தன் மகிமை பாடுகின்றோம்
1058.இனிய உன் நாமம் ஓதிடல் தினமே
இனிய உன் நாமம் ஓதிடல் தினமே
அனைவரும் மகிழ்வோமே - 2
தாயினும் மேலாம் தாயுமே நீயே தமியோர் திரவியமே - 2
அன்பிதே அன்பிதே மாதா
தன்னலமே அற்ற மாதா - 2 தாயினும்

1. கலைமொழியால் உனைத் துதித்திட நாளும்
கவலைகள் நீங்குமம்மா - 2
தேனிசைப் பாவால் தாயுன்னைப் பாட
தெவிட்டா இனிமையம்மா - 2 அன்பிதே

3. பஞ்சமும் நோயும் பகையும் தீர பரிவுடன் பாருமம்மா - 2
வளமோடு யாவும் நலமுடன் வாழ
வரமொன்று தாருமம்மா - 2 அன்பிதே
1059.உம்மைத் தேடி வந்தேன் சுமை தீருமம்மா
உம்மைத் தேடி வந்தேன் சுமை தீருமம்மா
உலகாளும் தாயே அருள் தாரும் அம்மா - 2

1. முடமான மகனை நடமாட வைத்தாய்
கடல் மீது தவித்த கப்பலைக் காத்தாய்
பால் கொண்ட கலயம் பொங்கிடச் செய்தாய்
பொருள் கொண்ட சீமான் உன் பாதம் சேர்த்தாய் - 2

2. கடல் நீரும் கூட உன் கோயில் காண
அலையாக வந்தே உன் பாதம் சேரும் - 2
உலகாளும் தாயே உனைப் பாடும் வேளை
நகர் தேடி வந்தேன் நலம் தாரும் அம்மா - 2
1060.எங்கள் அம்மா என்று உன்னை அழைக்கையிலே
எங்கள் அம்மா என்று உன்னை அழைக்கையிலே
நெஞ்சில் ஆறுதல் பிறக்குதம்மா
உந்தன் அன்பால் எம்மை அணைக்கையிலே
எங்கள் இதயம் மகிழுதம்மா
ஓ மரியே வாழ்க ஓ மரியே வாழ்க - 2

1. என் நெஞ்சில் நிலையாகக் கோயில் கொண்டாய்
எப்போதும் வசந்தமாய் வாசல் வந்தாய்
விடிவெள்ளியாக நீ வரும் போது விடியாத இரவுகள் ஏதம்மா
முடிவொன்று சொல்ல நீ உள்ள போது
முடியாத முடிவுகள் ஏதம்மா உனைப் பாடவே நான் வாழ்கின்றேன்
செபமாலைத் தாய்மரியே - எங்கள் - 2 ஓ மரியே

2. எல்லோர்க்கும் தாயாக நீயே வந்தாய்
இதயத்தில் ஆனந்தம் கோடி தந்தாய் - 2
வளமான வாழ்வு நீ தரும் போது
வணங்காத உயிர்களும் ஏதம்மா
கனிவான உந்தன் கருணைக்கு உலகில்
ஈடிணையேதும் இல்லையம்மா
மனம் உருகவே உனைப் பாடுவேன்
செபமாலைத் தாய்மரியே - எங்கள் - 2 ஓ மரியே
1061.எந்தன் ஆன்மா எந்தன் ஆன்மா
எந்தன் ஆன்மா எந்தன் ஆன்மா
இறைவனைப் புகழ்கின்றது

1. தாழ்ந்த என்னை உயர்த்திவிட்டார் இறைவனைப் புகழ்கின்றது
இது முதல் எல்லாத் தலைமுறை போற்றும் - இறைவனைப்

2. வல்லவர் எனக்கு அருஞ்செயல் புரிந்தார் - இறைவனைப்
தூயவர் என்பதும் அவரது பெயராம் இறைவனைப் புகழ்கின்றது

3. தலைமுறைக்கெல்லாம் விளங்குகின்றார் - இறைவனைப்
தன் தோள் வலிமை காட்டியுள்ளார் இறைவனைப் புகழ்கின்றது

4. செருக்குற்றோரைச் சிதறடித்தாரே இறைவனைப் புகழ்கின்றது
வலியவர் ஆட்சி அகற்றிவிட்டார் இறைவனைப் புகழ்கின்றது

5. பசித்திருப்போரை நலன்களால் நிறைந்தார் - இறைவனைப்
செல்வரை வெறுங் கையாய் அனுப்பி விட்டார் - இறைவனைப்
1062.எந்தன் உள்ளம் ஆண்டவரைப் போற்றி
எந்தன் உள்ளம் ஆண்டவரைப் போற்றிப்
பெருமைப்படுத்துகின்றது எந்தன் மீட்பராம்
வல்ல தேவனை நினைத்து நாளும் மகிழுகின்றது

1. ஏனெனில் அவர்தம் அடிமையின்
தாழ்நிலையைக் கடைக்கண் நோக்கினார்
இது முதல் எல்லாத் தலைமுறையும் - என்னைப்
பேறுடையாள் என்று போற்றுமே
வல்லவராம் கடவுள் எனக்கு வியத்தகு செயல் புரிந்துள்ளார்
அவர்க்கு அஞ்சி நடப்பவர்க்கு இரக்கம் காட்டி வருகிறார்
தூயவர் அவர் திருப்பெயராம்

2. ஏனெனில் அவர்தம் வலிமையைத்
தலைமுறையாய்க் காட்டி வருகின்றார்
மனத்திலே மிகுந்த செருக்குடனே சிந்திப்போரைச் சிதறடிக்கின்றார்
வலியவரை அரியணையினின்று தூக்கி எறிந்துள்ளார்
தாழ்ந்தவரை உயர்த்தினார் பசித்தவர் நலம் பெறச் செய்தார்
செல்வரை வெறுமையாக்கினார்
1063.எல்லோரும் கொண்டாடும் அம்மா மரி
எல்லோரும் கொண்டாடும் அம்மா மரி
எல்லோரும் மன்றாடும் ஆரோக்கியம் நீ - 2
உன்னைக் கண்டோம் கண்டோம் வேளைநகரிலே
கருணை அடைந்தோமே ‡ இன்று குறைகள் தீர்த்தோமே

1. அலைஅலையாக பலவகை மாந்தர் இங்கே கூடுகின்றார்
ஆதவன் போல பேதமில்லாமல் ஆறுதல் பொழிகின்றார் - 2
உம் இனமொழி பேதமில்லை எல்லா மதத்தாரும் உந்தன் பிள்ளை
நீ உலக மாந்தரின் உள்ளக் கோயிலில் வாழும் அரசியம்மா

2. வருகை என்றழைக்கும் வேளாங்கண்ணி எங்கள் தாய்நாடு
உருகிட வைக்கும் உன் திருக்கோயில் எங்கள் தாய்வீடு - 2
இந்த உண்மைக்கு யாம் சாட்சி இது உலகம் அறிந்த மாட்சி
உந்தன் குடும்பமாகவே கூடிப் போற்றினோம் மரியே வாழியவே
1064.என் ஆன்மா இறைவனையே
என் ஆன்மா இறைவனையே
ஏற்றிப் போற்றியே மகிழ்கின்றது
என் மீட்பராம் கடவுளை நினைக்கின்றது

1. தாழ்நிலை இருந்த தம் அடியவரை
தயையுடன் கண்கள் நோக்கினார்
இந்நாள் முதலாம் தலைமுறைகள்
எனைப் பேறுடையாள் என்றிடுமே

2. ஏனெனில் வல்லமை மிகுந்தவரே
எனக்கரும் செயல்பல புரிந்துள்ளார்
அவர்தம் பெயரும் புனிதமாகும்
அவருக் கஞ்சுவோர்க் கிரக்கமாகும்

3. கரத்தின் வல்லமை கொண்டே அவர்
செருக்குற்றோரைச் சிதறடித்தார்
வலியவர் அரியணை நின்று விழ
தாழ்ந்தவர் தம்மை உயர்த்தி விட்டார்

4. பசித்தவர் தமக்கு நலமீந்து
செல்வரை வெறுமையாய் அனுப்பி விட்டார்
முன்னோர் தமக்கு உரைத்ததுபோல்
ஆபிரகாமும் சந்ததியும்

5. இரக்கம் பெறவே என்றென்றும்
இசுரயேல் மக்களை ஆதரித்தார்
தந்தை திருமகன் ஆவியரும்
என்றும் மகிமை பெற்றிடவே
1065.என் ஆன்மா எந்நாளுமே
என் ஆன்மா எந்நாளுமே
ஆண்டவரை ஏற்றி ஏற்றிப் போற்றுகின்றது
என் மீட்பரை நினைத்து நினைத்து
எந்தன் நெஞ்சம் மகிழுகின்றது - 2

1. ஏழைகளை எளியவரை உயர்த்தினார்
பல இன்னல்படும் உள்ளங்களைத் தேற்றினார் - 2
செல்வரை வெறுங்கையராய் அனுப்பினார் - 2 நெஞ்சில்
செருக்குற்ற மனிதரையே சிதறடித்தார் - 2

2. அடிமைகளை அன்புடனே நோக்கினார் - அவர்
ஆள்பவரின் ஆணவத்தை நீக்கினார் - 2
தாழ்ந்தோரை மேன்மையாக உயர்த்தினார் - 2 வாழ்வில்
வீழ்ந்தோரைக் கருணையினால் ஆதரித்தார் - 2
1066.எனதான்மா இறையவனை ஏற்றியே மகிழ்கின்றது
எனதான்மா இறையவனை ஏற்றியே மகிழ்கின்றது
மீட்பராம் கடவுளையே என் மனம் புகழ்கின்றது
என்றென்றும் பாடிடும் எனதுள்ளமே
இறைவனின் வல்லமையே - 2

1. இறைவனின் உறைவிடம் ஏழைகளே
உழைத்து உயர்ந்திடும் கரங்களே - 2
ஏழை எளியவர் நிம்மதி அடைய
சுரண்டிய செல்வர்கள் ஓடியே மறைய - 2
நீதியின் அரசு எங்குமே வளர அழைக்கின்றது - இறைவனின்

2. இன்று முதல் தலைமுறை அறிந்திடுமே
வலியோரின் அரியணை சாய்ந்திடுமே - 2
நீதி உண்மையின் ஆட்சியும் உயர்ந்திட
தீமை வலியவர் வல்லமை குறைய - 2
கருக்குள்ள வார்த்தை சாட்சியாய் விளங்க அழைக்கின்றது
- இறைவனின்
1067.ஒரு நாவும் போதாதம்மா
ஒரு நாவும் போதாதம்மா
உன் திருநாமம் புகழ மரியே நான் உனைப்பாட

1. முறையோடு செபமாலை தினம் ஏந்துங்கள்
குறையாத நலம் யாவும் பெறலாம் என்று - 2
கரைசேரும் வழிதன்னை எளிதாய்ச் சொன்ன - 2
மரியாளே உனதன்பின் பெருமை சொல்ல

2. தவறாமல் இறைநோக்கி செபம் செய்யுங்கள்
உலகோர்க்கு மனசாந்தி கிடைக்கும் என்றே - 2
அழியாத நெறிதன்னை அழகாய்ச் சொன்ன - 2
மரியாளே உனதன்பின் பெருமை சொல்ல
1068.ஒரு நாளும் உனை மறவேன் தாயே
ஒரு நாளும் உனை மறவேன் தாயே
ஒரு நாளும் உனை மறவேன் - 2

1. கடல் நீரில் மிதந்தாலும் கானகத்தில் பறந்தாலும் - 2
உலகமெல்லாம் அறிந்தாலும் உத்தமனாய்ச் சிறந்தாலும்

2. நினைத்தவைகள் நடந்தாலும் நிலைகுலைந்தே மடிந்தாலும் - 2
என்னைப் பிறர்தான் இகழ்ந்தாலும் இனிதாகப் புகழ்ந்தாலும்
1069.ஓ தூய கன்னித்தாயே உம்மை நான் நேசிப்பேன்
ஓ தூய கன்னித்தாயே உம்மை நான் நேசிப்பேன்
ஊழியுள்ள காலமும் நான் உம்மை நேசிப்பேன் - 2

1. மோட்ச இராக்கினி தன்னைப் பாக்களால் போற்றுவோம்
வாக்கோடே உள்ளம் சேர வந்தனம் சாற்றுவோம் - 2

2. சேயரானோ ரெல்லோரும் சேர்ந்தொன்று கூடுவோம்
தூய நேசத்தினாலே சோபனம் பாடுவோம்

3. அன்னையின் மாட்சி தன்னை எல்லோர்க்கும் காட்டுவோம்
மென்மேலும் அவள் பேரில் மெய்யன்பை மூட்டுவோம் - 2

4. எல்லா விதத்திலேயும் எம் தாயை எண்ணுவோம்
பொல்லாங்கு தீர அவள் பொற்பாதம் நன்னுவோம்
1070.கதிரவனை ஆடையாய்க் கொண்ட கன்னிமரி வாழ்க
கதிரவனை ஆடையாய்க் கொண்ட கன்னிமரி வாழ்க
பிறைநிலவை மிதியாய்க் கொண்ட அன்னைமரி வாழ்க
அருள்நிறை மரியே இறைவனின் தாயே
பெண்குலத்தின் பெருமையே பேறுபெற்றவளே
போற்றுவோம் புகழுவோம் மாதாவைப் போற்றுவோம் - 2

1. விண்ணக மண்ணக அரசி நீயல்லோ
வேந்தன் அவர் தாயும் நீயல்லோ
ஆகட்டும் என்ற சொல்லாலே அகிலத்தையே மீட்டீர் - 2
அண்டிவரும் பக்தர்களின் அவலக்குரல் கேட்பீர் - 2 அருள்நிறை

2. சுவைக்கின் அன்னம்மாள் பெற்ற முத்தல்லோ
சுதந்திரத்தை அளித்த தாயல்லோ
நடமாடும் பேழையாய் இறைமகனைச் சுமந்தீர் - 2
நாடி வந்த எலிசபெத்தை உள்ளம் மகிழச் செய்தீர் - 2 அருள்நிறை
1071.கருணை நிறைந்தவளே - அம்மா
கருணை நிறைந்தவளே - அம்மா
கனிவைக் கொடுப்பவளே
பரிந்து பேசுபவளேநீ கன்னி மாமரியே
ஆவே - 4

1. பாவமன்றிப் பிறந்தவளே பாவையர்க்கு மாதிரியே
ஆவியினால் நிறைந்தவளே ஆண்டவர்க்குப் பணித்தவளே
பாவம் செய்த இம்மானிடர்க்கு - 2
உன் மகவைக் கொடுத்தவளே
வாழ்க அம்மா வாழ்க - நீ
வாழ்க என்றும் வாழ்க

2. வாழ்வினிலே ஒளிவிளக்காய் வாழ்ந்து வரும் நாயகியே
பாரினிலே மாந்தருக்கு வழித்துணையாய் இருப்பவளே
பாதம் தேடி உனை நாடி வந்தோம் - 2
அணைத்தெம்மை காத்திடுவாய் - வாழ்க அம்மா
1072.கருணை மழையே மேரி மாதா கண்கள் திறவாயோ
கருணை மழையே மேரி மாதா கண்கள் திறவாயோ
கண்கள் கலங்கும் ஏழை மகனின் கால்கள் தருவாயோ - 2

1. கன்னி மாதா தேவசபையின் கதவு திறவாதோ - 2
கனிந்து உருகும் மெழுகு விளக்கின் ஒளியும் வளராதோ - 2

2. தொட்ட இடங்கள் கோடி காலம் வாழும் உன்னாலே - 2
சோர்ந்த மகனை எடுத்து வைத்தேன் உந்தன் முன்னாலே
ஆடும் அலைகள் உன்னாலே அசையும் மரங்கள் உன்னாலே
உலகம் நடக்கும் உன்னாலே உதவி புரிவாய் கண்ணாலே - 3
1073.கலங்கரை தீபமே கலன்களின் தாரகையே
கலங்கரை தீபமே கலன்களின் தாரகையே
துலங்கிடும் மணியே கலங்குவோர்க் கதியே காத்திடுவாய் தாயே - 2

1. மாதர்களின் மாதிரியே மாயிருளில் ஒளி தாரகையே - 2
மாதரசியே மனஒளி தாராய் மாசு அகலச் செய்வாய்

2. தாயெனவே தாவி வந்தோம்
சேயெனவே எமைச் சேர்த்திடுவாய் - 2
பாவி என்னுள்ளம் தாயுனைத் தேடிக் கூவிடும் குரல் கேளாய்
1074.காணார் மலரே கற்பகமே கருணை வான்முகிலே
காணார் மலரே கற்பகமே கருணை வான்முகிலே
தினம் கோடி உன் புகழ்பாட
என் மனம் வேண்டி அழைக்குமே
வினை தானும் அகலுமே - 2 ஆவே - 3

1. ஆயிரம் கோடி ஆதவன் ஒளியைத் தாங்கிய முகமன்றோ - 2
நிறை ஆலயம் மேவியே ஆசனம் கொண்டவள்
அழகுத் தாயன்றோ
பூத்திடும் புன்னகை பூவிதழ் ஓரங்கள்
சொல்லுவ தென்னென்னவோ
உயர் பாசம் உதிரும் உன் பார்வையுமே
எம்மைப் பாதங்கள் சேர்த்திடவோ - உந்தன் - 2 ஆவே

2. மங்கை அருள் அதி சுந்தரமே செபமாலை மந்திரமே - 2
திருமந்திர மாநகர்க் கோயில் எழுந்த நல் மாணிக்க மகுடமே
அன்புக்கரம் கொண்டு ஆகிய நாள் முதல் ஆதரவானவளே
அருள் இன்முகம் காட்டி தாயெனக் காத்திடும்
தசுநேவிசு மாமரியே - திவ்ய - 2
1075.கிருபை தயாபத்தின் மாதாவாய்
கிருபை தயாபத்தின் மாதாவாய்
இருக்கின்ற இராக்கினி நீ வாழ்க - 2
எங்கள் சீவியமும் நீயே நிதம் தஞ்சமும் நீயே - 2
அம்மா அம்மா உன்னை நம்பினவர் இதுவரை
ஒன்றும் இல்லாமல் போனதில்லை நாளும் வரை - 2
ஏக அடைக்கலத் தாயல்லவா ஏழு துறைக்கும் நீயல்லவா - 2

1. ஏகப் பிரதாபத்தின் இராக்கினியே
எழில்மிகு மனமுள்ள கன்னிகையே - 2
வான் தேவ இரகசியமே வளரும் நல் அதிசயமே - 2 அம்மா
1076.கொண்டாடுவோம் அன்னை திருநாளையே
கொண்டாடுவோம் அன்னை திருநாளையே
மன்றாடுவோம் அன்னை பதம் நாடியே
ஒன்றாகுவோம் இங்கே பண்பாடியே நாம்
நன்றாகவே வாழ மன்றாடியே - 2 நன்றாகவே வாழ மன்றாடியே

1. தீபங்கள்எரிகின்றசோதியிலே
உம்திருமுகதரிசனம்கிடைக்கின்றதே - 2
வேதனைகள் சோதனைகள் வீழ்ந்திடவே - 2
வேளைநகர் தாயே உம்மை வேண்டுகின்றோம்

2. நெஞ்சமெல்லாம் நெகிழ்கின்ற வேளையிலே
நினைவெல்லாம் நீயிருந்து வாழ்ந்திடவே - 2
துன்பமெல்லாம் தூர ஓடிப் போகின்றதே - 2 உன்
திருநாமம் கேட்கின்ற போதினிலே
1077.கோடி விண்மீன் வானத்திலே கண்டேனம்மா அது
கோடி விண்மீன் வானத்திலே கண்டேனம்மா அது
கூடி ஒன்றாய்த் திருமுடியில் நின்றதேனம்மா - 2
சத்தியத்தின் பேரொளியாம் தேவ அன்னை - 2 - அந்த
உத்தமியின் ஒளிக்கு விண்மீன் உறவு கொண்டதே

1. வானத்திலே ஒளி வீசி வளரும் வெண்மதி - தாய்ப்
பாதத்திலே எழில் காட்டி இருப்பதும் என்ன - 2
ஞானத்தைப் படைத்த தேவன் தாயல்லவா - 2 - அன்னை
தாள் பணிந்த வெண்மதியின் நிலையைச் சொல்லவா

2. ஆரோக்கியம் தேடி வந்தோர் ஆலமரக் குளத்தடியில்
அருள்நிறை மரியே என்று செபிப்பதும் என்ன - 2
கருணைத் திருவுருவாம் கன்னி மரியாள் தந்த
காட்சிக்கு மாதாகுளம் சாட்சியாகுமே - 2
1078.சகாயத் தாயின் சித்திரம் நோக்கு
சகாயத் தாயின் சித்திரம் நோக்கு
அபாயம் நீக்கும் அன்னையின் வாக்கு
எத்துணைக் கனிவு எத்துணைத் தெளிவு
வேண்டிடும் மனத்திற்கு வரும் நிறைவு - 2

1. குத்திப் பிளந்திடும் ஈட்டியும் ஆணியும்
கொடூர சிலுவையும் கண்டு மிரண்டு - 2
தத்தித் தாய்மேல் சாய்ந்திடும் இயேசுவை
சதா உன் நினைவில் பதித்திடுவாய் - 2

2. அம்மா என்று கூவ அபயம் தந்து வருவாள் - 2
இம்மாநிலத்தில் இவள் போல் - 2
இரங்கும் தாயும் உளரோ - 2
1079.சகாயத்தாயே எங்கள் சந்தோசம் நீயே
சகாயத்தாயே எங்கள் சந்தோசம் நீயே
சதா எம்மைத் தேற்றுகின்ற தேவனின் தாயே
உம்மை மன்றாடி நலம் அடைந்தோம்
கொண்டாடி நன்றி பொழிந்தோம் - 2

1. மாதா நீ ஈன்ற இயேசு எங்கள் தெய்வம்
நீதான் அவர் சொன்ன யாவும் செய்த நெஞ்சம்
மரியே மாமரியே எங்கள் நல்மாதிரியே
எம்மையுன் பிள்ளைகளாய் அரவணைத்தாயே - உம்மை

2. அம்மா உன் பாதம் வீழ்ந்து கிடக்கும் மலர்கள்
அன்பும் நிம்மதியும் வேண்டும் எங்கள் மனங்கள்
உன்னையே சரணடைந்தோம் உன்னருள் கரம் விழைந்தோம்
இன்னலில் இடராமல் நல்வழி நடக்க - உம்மை
1080.சதா சகாய மாதா சதா சகாயம் செய்யும் மாதா
சதா சகாய மாதா சதா சகாயம் செய்யும் மாதா
தினந்தோறும் யாரும் வேண்டினாலும்
இல்லை என்னாத மாதா - 2

1. ஆதி பிதா ஆனவரின் அன்பான புத்திரியே - 2
சோதி சுடர் தேவன் திருத்தாயான உத்தமியே - 2

2. இசுபிரித்து சாந்து தேவன் இன்பமே பத்தினியே - 2
இசிட்ட பிர சாதவாக்கால் என்றதும் சத்தியமே - 2

3. வாசம் சேரும் ரோசாப்பூவே மாசற்ற தாய்மரியே - 2
நேசமுடன் இயேசுவையே நேசிக்க செய்குவையே - 2
1081.சூரியன் சாய காரிருள் மெல்லச்
சூரியன் சாய காரிருள் மெல்லச்
சூழ்ந்திட யாவும் சோர்ந்திடும் வேளை
பாருலகெங்கும் நின்றெழுந்தோங்கும்
பண்புயர் கீதம் வாழ்க மரியே - 2

1. மாய உலகினில் சிக்கி உழன்று
வாடியே உள்ளம் சோர்ந்திடும் வேளை
தாயகம் காட்டிக் கண்ணீர் துடைத்து
சஞ்சலம் தீர்க்கும் வாழ்க மரியே - 2

2. சுந்தர வாழ்க்கைத் தோற்றம் மறைய
துன்ப அலைகள் கோசித்தெழும்ப
அந்திய காலை எம்மருள் குன்றும்
ஆதர வீயும் வாழ்க மரியே - 2
1082.ஞானம் நிறை கன்னிகையே
ஞானம் நிறை கன்னிகையே
நாதனைத் தாங்கிய ஆலயமே
மாண்புயர் ஏழு தூண்களுமாய் - 2
பலிபீடமுமாய் அலங்கரித்தாயே

1. பாவ நிழலே அணுகா பாதுகாத்தான் உன்னையே பரமன்
பாவ நிழலே அணுகா
தாய் உதரம் நீ தரித்திடவே - 2
தனதோர் அமலன் தலமெனக் கொண்டார் - 2

2. வாழ்வோர் அனைவரின் தாயே வானுலகை அடையும் வழியே
வாழ்வோர் அனைவரின் தாயே
மக்கள் இசுராயேல் தாரகையே - 2
வானோர் துதிக்கும் இறைவியே வாழி - 2
1083.தஞ்சமென்று தாயே நெஞ்சம் மகிழ்ந்து உனையே
தஞ்சமென்று தாயே நெஞ்சம் மகிழ்ந்து உனையே
தேடியே வந்தோம் அம்மா
அருள் நிறைந்த மரியே ஆண்டவரின் தாயே
அருளாலே நிரப்பும் அம்மா
வாழ்க வாழ்க வாழ்க எங்கள் தாய்மரி
வாழ்க வாழ்க வாழ்க அன்பின் மாமரி

1. எலிசபெத்தின் முதிர்வயதில் ஓடோடி உதவினாய்
கானாவூர்த் திருமணத்தில் கண்ணீர் நீக்கிக் காத்திட்டாய்
திருமகனைக் காணாமல் கவலை கொண்டாயே
சிலுவை சுமந்த மகனைப் பின் தொடர்ந்தாயே
குறைதீர்க்கும் அம்மா நீவாழ்கவே
பலம் சேர்க்கும் தாயின் புகழ் ஓங்கவே - வாழ்க

2. தூய்மையென்னும் அணிகலனை ஆடையாக அணிந்திட்டாய்
தூய உந்தன் அன்பை என்னில் தளிர்த்து எழச் செய்திட்டாய்
ஆண்டவரின் கட்டளைக்கு அடிபணிந்தாயே
ஆவியிலே நிறைந்து நாளும் ஆண்டு வந்தாயே
மறை நீ வாழ்கவே
மலர் வீசும் உந்தன் மகிமை ஓங்கவே - வாழ்க
1084.தயாபர ராணி தட்சணம் ஆள்ராணி
தயாபர ராணி தட்சணம் ஆள்ராணி
தண்ணரும் செந்தமிழ் தென்முனைக் குமரியும்
தலைபணி செயராணி - 2

1. தயாபர ராணி தட்சணம் ஆள்ராணி
வெண்பனி இமயம் வெள்ளமார் கங்கை
விமரிசை புரிராணி - 2

2. தயாபர ராணி தட்சணம் ஆள்ராணி
வங்கமார் கலிங்கம் கொங்கணம் மலையாளம்
குதுகலி மகாராணி - 2
1085.தரணியர் வாழ்த்தும் தாய்மரியே
தரணியர் வாழ்த்தும் தாய்மரியே
வரம் விழைந்தோம் யாம் வாழ்வளிப்பாயே

1. குவலயம் போற்றிடும் கோமகனை
குறையினைப் போக்கிட கொடுத்தவளே
குறையற மனுக்குலம் மிளிர்ந்திடவே
கருணையின் முகில்தனைப் பரப்பிடுவாய்

2. சிலுவையின் அடியிலே தாயானாய்
சிறுமையில் மனிதரின் துணையானாய்
சிலுவையைச் சுமந்திடத் துணைபுரிவாய்
சிதறிய மனிதரைச் சேர்த்திடுவாய்
1086.தவமிருந்தோம் உம்மைக் காண அம்மா மரியே
தவமிருந்தோம் உம்மைக் காண அம்மா மரியே
தவமிருந்தோம் உம்மைக் காண அம்மா மரியே
தரிசனம் நீ தரவேண்டும் ஏழை எமக்கே
உந்தன் அன்பு ஒன்றே போதும்
உனைப் பாடும் சீவநாதம்
எங்கள் அன்னையே - 2
அம்மா மரியே தாயே மரியே - 2

1. அகிலம் போற்றும் அன்னை மரியே ஆண்டவரின் அன்புத் தாயே
ஞாலம் போற்றும் ஞானம் நீயே காலம் போற்றும் கன்னித் தாயே
எங்கள் குறை யாம் உணர்ந்தோம் - 2
உந்தன் பாதம் நாடி வந்தோம்
யாருமில்லா ஏழை எங்கள் துயரம் போக்குவாய் - 2
அம்மா மரியே தாயே மரியே - 2

2. இதோ உம் அடிமை என்றாய் இறைவனின் அன்னையானாய்
பெண்களுள் பேறு பெற்றாய் அருள் நிறை அன்னையானாய்
கோடி மக்கள் குறைகளெல்லாம் - 2
தீர்த்து வைக்கும் எங்கள் தாயே
தஞ்சம் என்று நாடி வந்தோம் கருணை காட்டுவாய் - 2
அம்மா மரியே தாயே மரியே - 2
1087.தாயிருக்க அவள் தயவிருக்க
தாயிருக்க அவள் தயவிருக்க
தாழ்வதில்லை நாம் வீழ்வதில்லை - 2
மரியே உலகின் தாய் அவள் போல் மாறா அன்புத்தாய் உண்டோ

1. அடிமையெனத் தனைத் தாழ்த்தி உரிமையை நமக்களித்தாள்
பொறுமையுடன் திருமகனை நமக்காய்ப் பறிகொடுத்தாள் - 2
நம் சிறுமை அவள் பொறுப்பாளோ - 2
சா நீ தம மா ரிம பநி தம பா
பா மா பா தா மா மா கா ரிக சா
வறுமையில் நம்மை விடுவாளோ ஆ...

2. அம்மாவெனத் தன் குழந்தை அழைத்திட விரும்புகிறாள்
தன் மழலைக் குரல் கேட்டு மனம் மகிழ்ந்துருகுகிறாள் - 2
தினம் அம்மா மரி என அழைப்போம் - 2 - சா நீ...
அன்பாய் நம் குறை அவள் தீர்ப்பாள் ஆ...
1088.தாயின் மடிதான் உலகம் அவள்
தாயின் மடிதான் உலகம் அவள்
தாளைப் பணிந்திடுவோம் - 2
அவள் சேயின் மடிதான் மோட்சம்
நம் சேசுவைத் தொழுதிடுவோம் - 2

1. பிள்ளை என்றும் வாழ நல்லது எல்லாம் தருவாள் - 2
அவள் உள்ளம் என்றும் மகிழ
உண்மை வழியில் நாம் நடப்போம்

2. அன்னை மரியாள் உள்ளம் ஆழம் காணாக் கடலாம் - 2
அன்பு கருணை உருவாய்
ஆண்டவன் தந்த அரும்பொருளாம்
1089.தாயே உந்தன் அன்பு சிறந்தது - இந்த
தாயே உந்தன் அன்பு சிறந்தது - இந்த
உலகம் சொல்லுதம்மா
அம்மா உந்தன் பாசம் மேலானது - என்
உள்ளம் சொல்லுதம்மா
வாழ்க நீயே கல்யாணத் தாயே - 2

1. தாயின் வயிற்றில் தோன்றுமுன்னே
உன்னைத் தேர்ந்தது இறையன்பு
அலகை உலகின் அழிவை நாட
அவனை அழித்தது உனதன்பு
முப்பொழுதும் கன்னியான அருள்தரும் தாய் நீயே
எப்பொழுதும் மூவுலகும் வாழத்துகின்ற தாயும் நீயே
வாழ்க நீயே கல்யாணத் தாயே - 2

2. தேடி வருவோர் பாவியென்றாலும்
அள்ளி அணைப்பது உனதன்பு
பதவி பட்டங்கள் இல்லையென்றாலும்
உள்ளம் காண்பது உனதன்பு
உண்மை அன்பை நம்பா உலகில் உனதன்பால் நிறைத்தாயே
விலையில்லா உமதன்பு என்றும் குறையா செல்வம் தாயே
வாழ்க நீயே கல்யாணத் தாயே - 2
1090.தாயே உன் பாதமே நாடினோம்
தாயே உன் பாதமே நாடினோம்
தஞ்சம் எனக் கூடினோம்
நீயே கதியென வாயார வாழ்த்தினோம்
நெஞ்சில் உறை அன்னையே

1. பிணியால் வருந்தும் துயர் நீங்கவே
தினம் கோடி பேர்கள் உனை நாடுவார் - 2
கனிவோடு நீ வந்து மகிழ்வோடு துணை செய்வாய்
கருணாகரி நீயே மரியன்னையே

2. கவலைகளினால் வாடுவோர் கண்ணீர் துடைத்தருளே
பாவவினை நீக்கி செபதவம் ஓங்கிப்
பாங்குடன் வாழச் செய்வாயே
1091.தாயே மாமரி தஞ்சம் தாராய் தாய்மரி
தாயே மாமரி தஞ்சம் தாராய் தாய்மரி
மாய உலகினில் காப்பாய் தாய்மரி

1. துன்பக் கடல்தனில் துயரில் மூழ்கையில் - 2
இன்பமாக இனிக்கும் உன் இனிய நாமமே

2. முட்கள் நடுவினில் முளைத்த லீலியே - 2
முப்பொழுதும் கன்னியே மகிழ்ந்து வாழ்த்துவோம்
1092.தாரகை சூடும் மாமரியே
தாரகை சூடும் மாமரியே
தாளினைப் பணிந்தோம் காத்திடுவாய் - 2

1. தேவனை உலகுக்கு அளித்தவளே
தேடிய துணையைக் கொடுப்பவளே - 2
வாடிய மகவை அணைப்பவளே வாழிய ஞானியர் காவலியே

2. தென்னகக் கன்னி கடலலையும்
பன்னெழில் இமய மாமலையும் - 2
மென்னெழில் எமது தாயகமும் உன் புகழ் பணிந்தே பாடாதோ
1093.தாவீதின் குலமலரே
தாவீதின் குலமலரே
ஒளி தாங்கிடும் அகல்விளக்கே - எமைக்
காத்திடும் ஆரணங்கே அருள் சுரந்திடும் தேன்சுனையே - 2

1. இறைவனே முதலில் உனைத் தெரிந்தார்
கறை சிறிதில்லாக் காத்திருந்தார் - 2
மறையவர் புகழும் மாமணியே
கரை சேர்ப்பதுவே உன் பணியே

2. மக்களின் மனமே மகிழ்ந்திடவே
நற்கனி சுதனை எமக்களித்தாய் - 2
கற்றவர் மற்றவர் யாவருமே
பொற்பதம் சேர்த்திட வேண்டுமம்மா
1094.தினம் தினம் எனில் அருள் வரம் தரும் மரியே தாய்மரியே
தினம் தினம் எனில் அருள் வரம் தரும் மரியே தாய்மரியே
வசந்தங்கள் வரும் வாழ்வினில் இன்று
உமை நான் வாழ்த்த வந்தேன்

1. வானதூதர் வாழ்த்துச் சொல்ல வாழ்வைச் சுமந்தவளே
வாடி நின்ற மாந்தர் நெஞ்சில் வசந்தம் வீசச் செய்தாய்
மனத்தினில் வலம்வரும் வளர்பிறையே
வழியினில் ஒளிதரும் விடிவெள்ளியே - 2
எந்தன் அருளே அமுதே அறிவே அமுதே ஆண்டவனின் தாயே

2. காலமெல்லாம் காத்திருந்த கடவுளைக் காணச் செய்தாய்
காக்கும் தேவன் கரங்களிலே - எம் வாழ்வினினை உணர வைத்தாய்
இதயத்தில் எழுந்திடும் இதயவளே
இகமதில் சுடரெனத் திகழ்பவளே
புது உலகம் மலர்ந்திட புதுமைகள் புரியும் வேளையின் நாயகியே
1095.தினமும் வாழ்த்துவோம் ஓ அன்னையே
தினமும் வாழ்த்துவோம் ஓ அன்னையே
நாம் தொழுதுனை ஏற்றி

1. தினமும் உனது பதத்தை ஏற்றி வனமே அரும்பும் மலரைத் தூற்றி
மனமே உனது புகழைச் சாற்றி
தனமோர் அன்னையென் றுனையே போற்றி

2. சிறுமை நிறைந்த மனிதன் பூச்சி வெறுமை அடர்ந்த உலகக் காட்சி
அருமை உமது தயையின் மாட்சி பெருமை அதற்கு உலகம் சாட்சி

3. அமுது நிறை உன் தயைக்கு துத்யம்
எமது நாவே படிக்கும் நித்யம்
உமது சலுகை எமக்கு கத்யம் சமயம் உதவி தருவாய் சத்யம்
1096.தெய்வீகத் திருமகளே கல்யாணத் தாய் மாரியே
தெய்வீகத் திருமகளே கல்யாணத் தாய் மாரியே
உம் திருத்தலத்திலே பிள்ளைகள் கூடி வந்தோம்
வற்றாத நீரூற்றாம் உம் அன்பில் மகிழ
ஆனந்த தாலாட்டும் உம் மடியில் தவழ
சேய்முகம் தேடும் உந்தன் உறவில் எந்நாளும் மகிழந்திருப்பேன்

1. இறைவனின் திருவருளால் தாவீதின் குலமலரே
விண்ணோர்கள் சந்நிதியில் மணவாழ்வில் இணைந்தாயே
முதல் பெற்றோர் செய்த பாவம் தலைமுறையாய்த் தொடர்ந்திடவே
ஆம் என்ற வார்த்தையினால் மீட்பபைத் தந்தாயே
சிலுவைகள் சுமந்திடினும் தொடர் துன்பம் வந்திடினும்
தாயாக என்னைக் காத்தாயே
சேய்முகம் தேடும் தாய் உந்தன் உறவில்
எந்நாளும் மகிழ்ந்திருப்பேன் - 2

2. இருள் எமைச் சூழ்ந்த போது விண்மீனாய் ஒளி தந்தாய்
வறுமையில் வாடும்போது உயிர்தரும் மழையானாய்
பயணத்தில் பாதையாய் உழைப்பிலே வலுவானாய்
பிறர் துயர் தீர்த்தபோது உள்ளத்தின் இசையானாய்
உறவுகள் பிரிந்திடினும் உரிமைகள் இழந்திடினும்
தாயாக என்னைக் காத்தாயே - சேய்முகம்
1097.தேவ தாயின் மாதம் இது அல்லவோ இதைச்
தேவ தாயின் மாதம் இது அல்லவோ இதைச்
சிறப்பாய்க் கொண்டாடிடவே புறப்பட்டு வாரீர் தோழர் - 2

1. தோட்டங்களில் உள்ள பல வாட்டமில்லா புசுபங்களை
சோடு சோடாய்ச் சேர்த்து நல்ல மாலை கட்டுவோம் - 2
கூட்டமாக எல்லாம் சேர்ந்து வீட்டிலுள்ள பேரைச் சேர்த்து - 2
கோயிலுக்கு சாயும்வேளை ஆவலுடன் போவோம் வாரீர்

2. ஒவ்வொரு வீட்டார்களெல்லாம் ஒவ்வொரு நாள் சிறப்பிக்க
ஒப்பந்தமே செய்தாலொரு தப்புமில்லையே - 2
இவ்விதமே செய்தால் பலன் எவ்வளவோ கூடிவரும் - 2
இந்த மாதம் எல்லாருக்கும் நல்ல வரம் சேர்ந்து வரும்

3. பூவிலுள்ள மானிடர்க்குத் தேவசுதன் தந்த அன்னை
புண்ணிய வரங்கள் எல்லாம் கொண்ட அன்னையே - 2
ஆவலுடன் நாம் எல்லாரும் தேவமரி பாதம் கூடி - 2
ஆனந்த மிகுந்த பல கீதங்களைப் பாடுவோமே
1098.தேவலோக சோதியே பூமியாளும் தீபமே
தேவலோக சோதியே பூமியாளும் தீபமே
வல்ல தேவன் அன்னையே வாழ்த்துகின்றோம் உம்மையே
அன்னையே ஆ வாழ்த்துகிறோம் உம்மையே

1. ஆழியோரம் கோயில் கொண்ட அற்புதமே
உந்தன் அருள்விழியின் பார்வையாலே இருள் களைபவளே
அள்ள அள்ளக் குறையாத அருட்கடலே -2
நான் சொல்ல சொல்ல இனிமையினை அருள்பவளே
நினைக்க நினைக்க இன்பமே நீதானம்மா
மனம் தேடுகின்ற நிம்மதியும் நீதானம்மா

2. எழில் பொங்கும் வேளைநகரில் எழுந்தவளே
எத்திசையும் புகழ் பரவும் மரகத மலரே
கல்வாரி மலை தந்த கனியமுதே
கறையில்லாத கன்னிகையே அருள்பவளே
1099.தேவன் தந்த தேவி நீ தெய்வீக புவனராணி நீ
தேவன் தந்த தேவி நீ தெய்வீக புவனராணி நீ
தேனோர் தம் புகழும் வாணி நீ தெய்வம் நீ என் தாயும் நீ

1. கற்பின் நிறை பொற்கலசம் நீ கருணை வடிவம் நீ
கர்த்தனைத் தாங்கிய கவசம் நீ கன்னியும் தாயும் நீ - 2
தெய்வத்தின் தெய்வம் அம்மா தேற்றிடும் அன்னையம்மா - 2

2. சத்திய வேத உத்திரம் நீ சாசுவத பொக்கிசம் நீ
சர்வலோகாதி இராக்கினி சகாய அன்னை நீ - 2
இன்முகக் காட்சி தனை என்றென்றும் நீ அருள்வாய் - 2
1100.நாதத்தின் இனிமையில் பண்பாடுவோம்
நாதத்தின் இனிமையில் பண்பாடுவோம்
எந்நாளும் அன்னையின் புகழ்பாடுவோம்
நெஞ்சத்தில் நிறைந்திடும் நல் அன்னைக்குப்
புகழ்ப்பாக்கள் பாடிடுவோம் ஆ... அன்னையே வாழ்க - 2
அருளால் - 2 நிறைந்த - 2 அன்னையே நீ வாழ்க

1. இறைவனின் திருவுளத்தை
நிறைவேற்றிட மனமுவந்தாய் - 2 என்றும்
மறைபுகழ் உன் வழி இறையுளம் அறிந்திட
குறையின்றிக் காத்திடுவாய்

2. தரணிக்குத் தாயானாய்த் - திருத்
தாய்மையைப் பாடுகின்றோம் - 2 என்றும்
திருவாம் இயேசுவின் அன்பர்கள் ஆகிடத்
தாயே உன் அருள் தாராய்
1101.நாளாம் நாளாம் புனித நாளாம்
நாளாம் நாளாம் புனித நாளாம்
தேவமாதாவாம் மேரியின் பிறந்த நாளாம் - 2

1. அன்பான தெய்வத் தாயாரின் நாளாம் - 2
அருளான கன்னித் தாயாரின் நாளாம்
ஏகாந்தமானதோர் நாளாம் இனிதான நாளாம் - 2
குளோரியா - 5 இன் எக்சல்சிஸ் தேயோ

2. தேவனும் தாமுமே பேசிட்ட நாளாம் - 2
தூயர்கள் தாமுமே தேடிட்ட நாளாம்
ஆனந்தம்பொங்குமோர்நாளாம்அமுதானநாளாம்-2-குளோரியா

3. தெய்வீக அன்போ கன்னியின் வழியாய்த் - 2
தாவீதின் குடியில் பிறந்திட்ட நாளாம்
மண்புவி காணாதோர் நாளாம் தெய்வீக நாளாம் - 2 - குளோரியா
1102.நிலவைப் போல் அழகுள்ளவளாய்
நிலவைப் போல் அழகுள்ளவளாய்க்
கதிரவனைப்போல் ஒளியுள்ளவளாய்
விடிகாலை வானம் போல் எழுந்து வரும் இவள் யாரோ - 2
அழகு அழகு என்ன அழகு - 2
என்ன அழகு உன் அருளழகு என்ன அழகு உன் அன்பழகு - 2
கீழ்வானின் நீர்ச்சுனையே தாவீதின் கோபுரமே
சாரோனின் மலரழகே சீயோனின் அருள் மகளே - என்ன அழகு

1. கன்னிமையின் தூய்மையும் தாழ்ச்சியின்
மேன்மையும் வார்த்தையின் உண்மையும்
கொள்ளை கொண்டதே - 2 என்னைக்
இயேசுவின் தாசனாய் என்னை வாழவைத்ததே - 2
அன்பே அருளே அமுதே அழகே நீ வாழ்க - 2

2. அன்பு விழி கருணையும் வாழ்வினில் எளிமையும்
விதையாய் என் நெஞ்சினில் விளைந்திடுமே கனிந்திடுமே - 2
வளமையும் வசந்தமும் தஞ்சம் கொள்ள வந்ததே - 2
அன்பே அருளே அமுதே அழகே நீ வாழ்க - 2
1103.நினைக்கும் மருந்தாகி அருள்வெளிக்கே விருந்தாகி
நினைக்கும் மருந்தாகி அருள்வெளிக்கே விருந்தாகி
ஏழிசைக்கு நீ காற்றாகி இன்பம் சுரக்கும் நல் ஊற்றாகி
நினைக்க நினைக்க நெஞ்சம் தித்திக்க தித்திக்க
வரம் கொடுக்கும் அன்னையே அம்மா - 2 அம்மா அம்மா
வணக்கம் வணக்கம் வணக்கமம்மா
வான்புகழ் வேளைநகர் ஆரோக்கிய மாதாவே - 2

1. மணக்கும் தமிழாலே வணக்கம் அம்மா - எழில்
மலர்ந்திடும் இசையாலே வணக்கம் அம்மா - 2
நினைக்கும் என் நினைவாலே குவிக்கும் என் கரத்தாலே
தித்திக்கும் காவியமாய் தேவனைச் சுமந்தவளே - 2

2. வேளைநகர் வந்த விண்ணவர் தாயே
வேண்டும் அன்பரின் உடல் பொருள் நீயே - 2
தாளைப் பணிந்தவர்க்கே தஞ்சம் அளித்தாயே
கத்தும் கடல் ஓரம் ஆலயம் கொண்டாயே
1104.பரலோக பூலோகத் தாய்மரியே
பரலோக பூலோகத் தாய்மரியே
பாவிகளின் அடைக்கலமே - 2
தோப்புவிளையின் காவலியே
புதுமைகள் என்றும் புரிபவளே - 2
வாழ்க மாமரியே வாழ்க தாய்மரியே - 2

1. இயேசுவை உலகிற்கு ஈன்றவளே
மாசில்லா கன்னியே மாமரியே - 2
பெண்களுள் சிறந்த பேரேழிலே
இறைவனை நம்பிய திருமகளே - 2 வாழ்க

2. தூய நல் ஆவியின் ஆலயமே
அருள்நிறை மரியின் ஓவியமே - 2
எம் நிறை மகிழ்வின் காரணமே
நம்பிக்கை குன்றியோரின் ஆதாரமே - 2 வாழ்க
1105.பாவிகளுக்கு அடைக்கலமே
பாவிகளுக்கு அடைக்கலமே
பாவிகள் மனந்திரும்ப வேண்டிக்கொள்ளும்

பாவிகளுக்கு அடைக்கலமே
எங்களின் அன்பு அமைதி மகிழ்ச்சி நிலவ வேண்டிக்கொள்ளும்

பாவிகளுக்கு அடைக்கலமே
நாங்கள் உடல் உள்ள நலம் பெற வேண்டிக்கொள்ளும்

மரியாயின் மாசற்ற இருதயமே
இந்தியாவுக்காக வேண்டிக்கொள்ளும்

மரியாயின் மாசற்ற இருதயமே
அன்பு நீதி சமாதானம் உலகில் உண்டாக வேண்டிக்கொள்ளும்
1106.புகழ்வாய் மனமே இசைப்பாய் கானமழை
புகழ்வாய் மனமே இசைப்பாய் கானமழை
பணிவாய் புலன்களே மேரி மாதா சந்நிதியில் - 2

1. அவள்தான் உன் அன்னையே உனக்காய் செபிப்பவளுமே
உன் ஆத்ம வாஞ்சையுமாய் இருப்பாள் அவள் என்றுமே
ஒருபோதும் மறவாமலே புவிமீது காத்திடுவாள் - 2

2. தெய்வமாதா தான் அவளே செய்வதெல்லாம் மகத்துவமே
போக்குவாள் உன் துயரங்களை துதிப்பாய் நீ அவள் அடியே
வேளாங்கண்ணியளாம் அன்னையை மறவாமலே தினமும் - 2
1107.புவனராணியே புனித ராணி புகழுமா
புவனராணியே புனித ராணி புகழுமா
மகிமை ராணியே - 2

1. சகல லோகம் ஆளும் மகா ஏக பரமன் தாய் - 2
அகமும் உடலும் அழகு மிளிரும் அன்னைமரி நீயே - 2

2. கவலை மோதி வாட்டும் எம்மைக் காப்பதுன் கடமை - 2
தவமும் தயையும் நிறையும் மரியே அபயம் எங்கள் தாயே - 2
1108.பொற்பை நகரின் காவலியே
பொற்பை நகரின் காவலியே
பாசத்தோடு பாட வந்தோமே - 2
பரிவுடன் எம் குறைதீர்க்க பரமன் உன் இயேசுவைக் கேளும் - 2

1. நோயில் வாடும் எம்மவர்க்கு நோய் தீர்க்கும் மருந்தானாய்
எளிய எங்கள் வேண்டுதலை ஏற்று எமக்கு வரம் தருவாய் - 2

2. ஆண்டவர் அருளால் நிறைந்து இயேசுவையே எமக்குத் தந்தாய்
இயேசு வழியில் நடந்திடவே எமக்கு என்றும் துணை நிற்பாய் - 2
1109.மதுமலர் முகமோ ஒளிர்நிறை நிலவோ
மதுமலர் முகமோ ஒளிர்நிறை நிலவோ
அழகுறும் தேவதையே
கதிரவன் சுடரோ கருணையின் வடிவோ
தரணியின் தாரகையே - 2
இந்த வானமும் பூமியும் தோன்றும் முன்னே
பரிபூரணத் தாயென நீ திகழ்ந்தாய் ஆவே - 4

1. ஆதிப்பிதாவின் திருமகளே
அனைத்துலகாளும் குலமகளே - 2
வானிறை வந்த சீதனமே
வளரு மாமந்திர ஆலயமே - 2 இந்த

2. ஆலயமணி உன் புகழ்பாடும்
அலைகடல் ஓசை இசையாகும் - 2
உறைபனி நிறைதிகழ் ஆசனத்தில்
உன் திரு அழகினை எமக்களிப்பாய் - 2 இந்த
1110.மரியின் மடியில் மனிதம் மலர
மரியின் மடியில் மனிதம் மலர
சுரங்கள் இசைக்கின்றேன் - 2
ஏழை மனத்தின் ஏக்கம் தீர வரங்கள் கேட்கின்றேன் - 2
மரியே தாய்மரியே மரியே அருள்மரியே

1. பாலைமணலில் பயணம் போலே எந்தன் துணையே நீதானே -2
மரியே மரியே மரியே மரியே
அந்தச் சோலை மலர்கள் பூப்பது போல் - நீ
எந்தன் மனத்துக்குள் பூத்திருந்தாய்
மரியே மரியே நீ எந்நாளும் தாய்மரியே
நீ எந்நாளும் அருள்மரியே

2. தேடும் போது வாழ்க்கை வந்தால் உந்தன் கருணை அதுதானே - 2
மரியே மரியே மரியே மரியே
அந்தக் காலைக்குயிலின் கீதம் போல் - நீ
எந்தன் நெஞ்சில் பதிந்திருந்தாய் - மரியே
1111.மரியென்னும் நாமம் அழகு நாமம்
மரியென்னும் நாமம் அழகு நாமம்
மங்காத நாமம் திருநாமம் ஆவே மரியா

1. அடிமை என்பதும் இவளன்றோ
அற்புதத் தாயும் இவளன்றோ
இறைவனின் தாயாய் இவளிருக்க
அழுதிட இவள் நம்மை விடுவாளோ

2. பகையும் வன்மையும் மறைந்திடவே
ஒற்றுமை எங்களில் நிறைந்திடவே
எல்லாரும் உம் அருள் பெற்றிடவே
எந்நாளும் அருள்வாய் தாய்மரியே
1112.மரியே உன்னைப் போற்றுகின்றோம்
மரியே உன்னைப் போற்றுகின்றோம்
மாதவமே உன்னை வாழ்த்துகிறோம்
இறையே உன்னை ஏற்றுகின்றோம்
அருள்வடிவே நன்றி கூறுகின்றோம்

1. கிறிஸ்துவின் போதனை செயல்களையே
மனத்தினில் எந்நாளும் தியானம் செய்தாய்
இயேசுவை முழுமையாய்ப் புரிந்துகொண்டு
உத்தம சீடனாய் உயர்ந்து நின்றாய்

2. இயேசுவின் புரட்சி செயல்களிலே
இறைவனைப் புகழ்ந்து பாடி நின்றாய்
துன்பங்கள் இயேசுவைச் சூழ்கையிலே
உணர்வாய் அவருடன் ஒன்றுபட்டாய்
1113.மலையும் அழியலாம் மண்மேடு ஆகலாம்
மலையும் அழியலாம் மண்மேடு ஆகலாம்
அலைகடல் வற்றலாம் பெருவெளியாகலாம்
அழியாத அறமோடு நிலையான உமதன்பு
அழியாத கருணையம்மா - 2

ஆரோக்கிய மாதாவே அம்மா - 2
தீராத பிணி தீர்க்கும் திருத்தாயே வேளைநகர்
ஆரோக்கிய மாதாவே அம்மா - 2

1. வாடாத மலரல்லவா நீ வாடாத மலரல்லவா
இறைமகனுக்கும் வீடல்லவா - 2
அந்த வீடெங்கள் நிழலல்லவா - 2
இது வேளைநகர் செய்த தவமல்லவா

2. அலைகடல் ஓசை உன் பாமாலை
தவழ்ந்த உன் அன்புமொழி பூமாலை - 2
இயற்கை எழில் சிந்தும் சோலை - 2
வணங்கி மகிழ்வோம் உத்தமியின் தாளை - 2
1114.மறந்தாலும் மறவாத தாய்மரியே உந்தன்
மறந்தாலும் மறவாத தாய்மரியே உந்தன்
மலர்ப்பாதம் பணிவேனம்மா - 2
இறந்தாலும் இறவாத மாமரியே - உன்னை
இசையாலே புகழ்வேனம்மா - 2

1. கடலினிலே கண்டெடுத்த விலையுயர்ந்த முத்தினைப் போல்
உலகினிலே இறையவனின் சொத்தாகினாய் - 2
பல வழியில் நிலைமாறித் தடுமாறும் மானிடரை - 2
திருமகனின் பதம் சேர்க்கும் வழியாகினாய்

2. இறைவார்த்தை நிதம் கேட்டு இதயத்தில் தியானித்து
கறையேதும் இல்லாமல் சிறந்தோங்கினாய் - 2
முறையாக இவ்வுலகில் இறைஇயேசு வழி வாழ - 2
குறையாத அருள்பொழியும் சுனையாகினாய்
1115.மனசெல்லாம் மெல்ல மெல்ல
மனசெல்லாம் மெல்ல மெல்ல
மரியே உன் பேரைச் சொல்ல
அகமே அகமே அருள் நிறையுதம்மா
பூ பூக்கும் நந்தவனம் போல் எந்தன் மனம் தினம்
அருளால் அருளால் அம்மா உன் அருளால்
கைத்தாளம் போடுவோம் மகிழ்ந்து கூடுவோம்
எக்காளம் ஊதுவோம் புகழ்ந்து பாடுவோம்
செபமாலை சூட்டி மங்கலங்கள் கூறுவோம்

1. இறைவன் வாழும் சீயோன் நகரமே
யாவே தங்கிய சீனாய் சிகரமே
அழிந்திடா பேழையே அழகான சோலையே
விண்ணக வாசலே மாசில்லாத கன்னியே
ஆணவத்தைத் தாழ்ச்சியினால் ஆளும் செபமாலையே

2. இறைவன் உம்மை விரும்பியதாலே
உறைவிடமாக உமைத் தேர்ந்தாரே
ஆண்டவர் உம்மிலே வாழ்கிறார் என்றுமே
அனுதினம் தீமைகள் அழியுமே மண்ணிலே
ஆர்ப்பரிப்போம் அகமகிழ்வோம்
நன்றி சொல்லிப் போற்றுவோம்
1116.மாசற்ற கன்னியே வாழ்க தேவன்னையே
மாசற்ற கன்னியே வாழ்க தேவன்னையே
தாசர்க்குதவியே நேசர்க்கருள்வாயே - 2

1. மானிடர்க் குற்ற சாபம் மாதுனக் கிலையே
ஆனந்த பிரதாபம் ஆனதுன் நிலையே

2. சாதந்த கனியாலே சாபமும் அழிவும்
நீ தந்த கனியால் நேசமும் உயிரும்

3. பாசஞ்செய் பிசாசான பையரவதனை
நாசமாய்க் குதிங்காலால் நைந்திட மிதித்தாய்
1117.மாசில்லாக் கன்னியே மாதாவே உன் மேல்
மாசில்லாக் கன்னியே மாதாவே உன் மேல்
நேசமுள்ளோரெல்லாம் நன்மக்கள் ஆவர்
வாழ்க வாழ்க வாழ்க மரியே -2

1. மூதாதை தாயார் செய் முற்பாவமற்றாய்
ஆதியில்லாதோனை மாதா நீ பெற்றாய் - 2 வாழ்க

2. தாயே நீ ஆனதால் தாபரித்தென்மேல்
நேசம் வைத்தாள்வது நின் கடனாமே - 2 வாழ்க
1118.மாசில்லா மரியே மங்காத மதியே
மாசில்லா மரியே மங்காத மதியே
அருட்சுடர் பெறும் வழியே - 2
உன்னை அம்மா என்றழைத்தால்
ஆறுதல் தந்து அடைக்கலம் தருபவளே
அன்னை நீ வாழ்கவே எங்கள் மரியே நீ வாழ்கவே - 2

1. ஆகட்டும் என்று அம்மா மொழிந்தாய் எம் மீட்பர் வந்தாரம்மா
இதோ உன் தாயென இறைமகன் தந்தார் இன்பமே பெருகுதம்மா
வானமும் வையமும் என்றுமே வாழ்த்தும்
மகிமையின் தாய்மரியே இறை மகிமையின் தாய்மரியே
- அன்னை நீ வாழ்கவே

2. சீடர்கள் குழுவினில் இறைவனை வேண்டிய ஆவியின் ஓவியமே
இயேசுவின்வார்த்தைக்குச்செயல்உருக்கொடுத்திட பணிக்கின்றகாவியமே
பன்னிரு விண்மீன் முடிசூட வாழ்த்தும் விண்ணகப் பேரெழிலே
இறை விண்ணகப் பேரெழிலே - அன்னை நீ வாழ்கவே
1119.மாதா உன் கோயிலில் மணிதீபம் ஏற்றினேன்
மாதா உன் கோயிலில் மணிதீபம் ஏற்றினேன்
தாய் என்று உன்னைத் தான் - 2
பிள்ளைக்குக் காட்டினேன் மாதா

1. மேய்ப்பன் இல்லாத மந்தை வழிமாறுமே - 2
மேரி உன் சோதி கொண்டால் விதிமாறுமே
மெழுகுபோல் உருகினோம் கண்ணீரை மாற்ற வா - மாதா

2. காவல் இல்லாத சீவன் கண்ணீரிலே - 2
கரை கண்டிராத ஓடம் தண்ணீரிலே
அருள்தரும் திருச்சபை மணியோசை கேட்குமோ - மாதா

3. பிள்ளை பெறாத பெண்மை தாயானது - 2
அன்னை இல்லாத மகனைத் தாலாட்டுது
கர்த்தரின் கட்டளை நான் என்ன சொல்வது - மாதா
1120.மாதாவே சரணம் உந்தன் பாதாரம் புவிக்காதாரம்
மாதாவே சரணம் உந்தன் பாதாரம் புவிக்காதாரம்
கன்னி மாதாவே சரணம்
மாபாவம் எம்மை மேவாமல் - 2
காவாயே அருள் ஈவாயே - கன்னி மாதாவே

1. மாசில்லா மனமும் இயேசுவின் உள்ளமும்
மாந்தரின் தவறாமல் நோவுறக் கண்டோம் - 2
செபம் செய்வோம் தினம் செபமாலை சொல்வோம் - 2
பாவத்திற்காகப் பரிகாரம் புரிவோம்

2. நானிலத்தில் சமாதானமே நிலவ
நாத்திக உலகம் ஆத்திக மடைய - 2
உடல் உயிர் அனைத்தும் உவப்புடன் அளிப்போம் - 2
உன் இருதயத்தில் இன்றெமை வைப்போம்
1121.மாதாவே துணை நீரே
மாதாவே துணை நீரே
உம்மை வாழ்த்திப் போற்ற வரந்தாரும்
ஈதோ பிள்ளைகள் வந்தோம் அம்மா
ஏற்றன் பாக எமைப் பாரும் - 2

1. வானோர் தம்மரசே தாயே எம்
மன்றாட்டைத் தயவாய்க் கேளும் - 2
ஈனோர் என்றெம்மை நீர் தள்ளாமல்
எக்காலத்துமே தற்காரும்

2. ஒன்றே கேட்டிடுவோம் தாயே யாம்
ஓர் சாவான பாவந்தானும் - 2
என்றேனும் செய்திடாமற் காத்து
எம்மை சுத்தர்களாய்ப் பேணும்
1122.மாமறை புகழும் மரியென்னும் மலரே
மாமறை புகழும் மரியென்னும் மலரே
மாதரின் மாமணியே - 2

1. அமலியாய் உதித்து அலகையை மிதித்து
அவனியைக் காத்த ஆரணங்கே - 2
உருவிலா இறைவன் கருவினில் மலர
உறைவிடம் தந்த ஆலயமே

2. பழியினைச் சுமந்த உலகினில் பிறந்து
ஒளியினை ஏற்றிய அகல்விளக்கே - 2
இருள்திரை அகற்றி அருள்வழி காட்டி
வானக வாழ்வை அளிப்பாயே
1123.முதல்வனின் தாயே புதல்வர்கள் பணிந்தோம்
முதல்வனின் தாயே புதல்வர்கள் பணிந்தோம்
உதவிட வாராயோ உந்தன் அருள்நிறை தாராயோ

1. வாழ்ந்திடத் துடிக்கின்றேன் எனக்கு வழிவகை தெரியவில்லை - 2
கைகளைப் பிடித்திடுவாய் அம்மா துயரின்றி நடந்திடுவேன்

2. இறைவனின் மகளானாய் எங்கள் ஆண்டவர் தாயானாய் - 2
நீ இன்று அறிந்திடுவாய் உந்தன் சேய்களின் குறைகளம்மா
1124.மூவோர் இறைவன் தேர்ந்து வரைந்த
மூவோர் இறைவன் தேர்ந்து வரைந்த
அழகின் ஓவியமே நீ அழகின் காவியமே
நிலவின் மேலே ஒளியாய் நின்று
எம்மை ஆள்பவளே திருக்கல்யாண தாணுவளே
ஒளிரும் உம்முக தரிசனம் இருளை நீக்கும் அற்புதமே
ஒளிரும் உம்முக தரிசனம் ஓயா அலைகளின் நம்பிக்கையே - 2

1. கல்வாரி மலையில் எமக்குத் தாயாய்
காலமெல்லாம் நீயே இருக்க
பிள்ளைகள் நாங்கள் உம்மைத் தேட
நீயே வருகின்றாய் எம்மைத் தேடி
உம்மை நம்பி வருவோர் எவரும்
வெறுமையோடு போவதில்லை
ஏனெனில் நீ தோன்றுமுன்னே
அருளின் நிறைவாய்த் தோன்றினாயே - ஒளிரும்

2. வியர்வை சிந்தும் குடும்பம் உமது
நிறைவு தருகின்ற வாழ்வும் உமதே
இறையால் எல்லாம் ஆகும் என்றே
உலகின் மீட்புக்காய் அடிமையானாய்
காக்கும் இறைவனின் வல்ல செயலை
எங்கள் வாழ்விலும் உணர வைத்தாய்
கவலையில்லா வாழ்வு தந்து
உம்மைப் புகழ ஆற்றல் தந்தாய் - ஒளிரும்
1125.யாத்ரி கட்குப் பாதை காட்டும் தாரகையே
யாத்ரி கட்குப் பாதை காட்டும் தாரகையே
என்றும் கன்னித் தாயே என் தஞ்சமே வாழ்க
ஆவே ஆவே ஆவே மரியே - 2

1. தேவ தூதன் சொன்ன தேவ வாழ்க்கை ஏற்று
ஏவை பேரை மாற்றும் சீவ இன்பம் ஊற்றும் - ஆவே

2. பாவ இருள் போக்கி வேத ஒளி யாக்கி
ஆவியின் நோய் தீரும் சீவ வரந் தாரும் - ஆவே
1126.வங்கக் கடலில் ஒரு முத்தெடுத்தேன்
வங்கக் கடலில் ஒரு முத்தெடுத்தேன்
வானவர் தாய் என நான் அடுத்தேன்
தங்கத் தமிழ்நாட்டில் வேளை நகர் தன்னில்
தாயாக வந்த எங்கள் ஆரோக்கிய மாதாவே

1. எங்கெணும் உன் புகழ் திருகீதமே மக்கள்
இதயம் கசிந்து கண்ணீர்க் கதை கூறுமே - 2
மங்கலப் பண்பாடும் எந்தன் நெஞ்சம் - 2
திகழ்பிறை சூடும் உந்தன் திருப்பாதமே

2. பல கோடி மக்களுக்குப் பார்வை தந்தாய்
நடமாடும் முடவர்க்கும் அருள் புரிந்தாய் - 2
நலம் காண ஊமையைப் பேச வைத்தாய் - 2
மரக்கலம் போலத் தவித்தோரை வாழவைத்தாய்
1127.வங்கக் கடலலைகள் வந்து தாலாட்டும்
வங்கக் கடலலைகள் வந்து தாலாட்டும்
எங்கள் ஆரோக்கியத் தாய்மரியே நீ வாழ்க
எங்கும் புகழ் மணக்க விளங்கும் பேரணங்கே
எங்கள் தாயாக என்றும் இருப்பவளே

1. முடமாய் இருந்தவனை முழுவதும் குணமாக்கி
நடமாடச் செய்தவளே நாயகியே தாயே
குறைந்திட்ட பால் பெருக்கி குன்றாத நலம் புரிந்து - 2
நிறைவு அடைந்திடச் செய்த எம் தாய்மரியே

2. செவ்வாய் இதழ்விரித்து செங்காந்தள் கரமுயர்த்தி
ஒவ்வாத பிணியெல்லாம் நொடியில் தீர்ப்பாய்
கத்தும் கடல் புயலடக்கி காற்றை நெறிப்படுத்தி - 2
தரையில் அமைதியைத் தந்தவள் நீ தாயே
1128.வந்தோம் உம் மைந்தர் கூடி ஓ மாசில்லாத்தாயே
வந்தோம் உம் மைந்தர் கூடி ஓ மாசில்லாத்தாயே
சந்தோசமாகப் பாடி உன் தாள் பணியவே

1. பூலோகம் தோன்றும் முன்னே ஓ பூரணத் தாயே
மேலோனின் உள்ளந்தன்னில் நீ வீற்றிருந்தாயே

2. தூயோர்களாம் எல்லோரும் நீ தோன்றும் நாளினை
ஓயாமல் நோக்கிப் பார்த்தே தம்முள் மகிழ்ந்தாரே

3. வானங்கள் கீதம் பாட நல் மாந்தர் தேடிட
ஊனஞ்செய் பாம்பு ஓட நீ உற்பவித்தாயே
1129.வாழ்க வாழ்க மரியே வாழ்க
வாழ்க வாழ்க மரியே வாழ்க
வரம் நிறை பரலோக செல்வியே வாழ்க
பால்வடியும் அம்புலியே - 2
நின் பதமதில் தாங்கிய மகத்துவ சீலியே
தானானே தானானே தானானேனா
தன் தானானே தானானே தன்னானேனா

1. வானுடை அணிந்திடும் தவமணியே
அருள் ஞான மனோகர தவமணியே
வானோர் பணிவதன் மணியே - என்றும்
செபமாலை அணிந்த சிகாமணியே

2. பாவிகட்காதரவா மணியே - உயர்
பரலோக பூலோக ராக்கினியே
தாவீது வம்ச மனோன்மணியே - 2
உந்தன் தயை விழிதிறந்தருள் கூறும் மணியே
1130.வான்லோக ராணி வையக ராணி
வான்லோக ராணி வையக ராணி
மண்மீதிலே புனித மாது நீ - 2

1. விண்ணொளிர் தாரகை தாயே நீ
தண்ணொளிர் வீசிடும் ஆரணி - 2
பாவமேதுமில்லா சீலி பாவிகளின் செல்வராணி
பாதுகாத்து ஆளுவாயே நீ - 2

2. சென்ம மாசில்லா மாதரசி
செம்மைசேர் மங்கையர் இராணி நீ - பாவமேது

3. புண்ணிய மேநிறை மாது நீ
விண்ணவர் போற்றிடும் அம்மணி - பாவமேது
1131.வானக அரசியே மாந்தரின் அன்னையே
வானக அரசியே மாந்தரின் அன்னையே
நான் உனைப் பாடிடுவேன் மனம் மகிழ்ந்திட வாழ்த்திடுவேன்

1. பன்னிரு விண்மீன் முடியெனக் கொண்டவள் நீ
பொன் கதிரோனை ஆடையாய் அணிந்தவள் நீ - 2
அலகையின் தலைமிதித்தாய் விண்
மன்னனை எமக்களித்தாய்

2. இன்றும் மீட்பின் பணி தொடர்கின்றாய்
காட்சிகள் வழி இறையருள் தருகின்றாய் - 2
புவியதன் தாய் எனவே மக்கள் அனைவரைக் காக்கின்றாய்
1132.விடியலைத் தேடும் நெஞ்சங்களே
விடியலைத் தேடும் நெஞ்சங்களே
விடியாக் கனவின் சொந்தங்களே
நமக்கொரு தாய் இருக்கின்றாள்
வாருங்கள் அவளிடம் செல்வோம் - 2

1. இருள் சூழும் உலகினிலே ஒளிதேடி அலையுது நெஞ்சம்
கீழ்வானம் சிவக்குமென்று உறங்காது ஏங்குது நெஞ்சம் - 2
தாயவள் அழகு பொற்சித்திரம்
கீழ்வானின் நம்பிக்கை நட்சத்திரம் - 3

2. புயலாக துன்பங்களும் இதயத்தின் கரையினில் மோதும்
மலராத மொட்டுகளாய் இதயத்தில் இன்பங்கள் வாழும் - 2
வாழ்வினில் என்றும் போராட்டமே
தாயவள் அன்பில் தேரோட்டமே என்றும் தேரோட்டமே
1133.விண்ணெழுந்து செல்லும் இந்த செபப் பாட்டு
விண்ணெழுந்து செல்லும் இந்த செபப் பாட்டு
அன்னைமரி உள்ளம் தட்டும் மன்றாட்டு - 2
செபமாலை சொல்லுவோம் அருள்மாலை சூடுவோம் - 2

1. விண்ணகத்தந்தையின் அன்புப் பரிசாம் அன்னை மரியாள்
மண்ணவர் தாயின் பெரும் பரிசாம் அருள்மரியாள் - 2
சொல்லொண்ணா துயரம் நீங்கவே
சொந்தங்கள் யாவும் சூழவே - 2
செபமாலை சொல்லுவோம் அருள்மாலை சூடுவோம் - 2

2. நெஞ்சினில் கனக்கும் பாவச்சுமைகள் இறக்கிவைப்பாள்
மின்னியே மிரட்டும் பகையதனை விரட்டி நிற்பாள் - 2
அன்னையால் எதுவும் ஆகுமே
அற்புதங்கள் கோடி நிகழுமே - 2
செபமாலை சொல்லுவோம் அருள்மாலை சூடுவோம் - 2
1134.விண்மீன் முடியென கொண்டவளே எங்கள்
விண்மீன் முடியென கொண்டவளே எங்கள்
விமலனைத் தாங்கிய ஆலயமே
எழில்மலர் போன்ற சித்திரமே - உந்தன்
நித்திய அழைப்பினை ஏற்கவந்தோம் - 2

1. அன்பிலும் அருளிலும் வளரச் செய்வாய் - இறை
ஆசீரை எங்களில் மிளிரச் செய்வாய் - 2
இறைவாக்கினை யாம் மனத்திற்கொண்டே - என்றும்
உன்னைப் போல் ஊன்றி வாழச் செய்வாய் - 2
இகமதில் மலர்ந்திட இறைபுகழ் பாடிட
இயேசுவின் பாதத்தில் சேர்த்திடுவாய் - 2

2. நீதியில் யாம் செல்ல வழிகாட்டுவாய் - என்றும்
நேரிய நெறிதனில் வளரச் செய்வாய் - 2
சமத்துவம் என்னும் சங்கீதத்தை - யாம்
பாரெங்கும் பாடிட வரம் தருவாய் - 2
வலியவர் அரியணை உடைந்திட தகர்ந்திட
எளியவர் வாழ்வு மலரச் செய்வாய்
1135.வியாகுல மாமரியே தியாகத்தின் மாதாவே
வியாகுல மாமரியே தியாகத்தின் மாதாவே
சிலுவை அடியினிலும் இறைத் திருவுeம் ஏற்றாயே - 2

1. பன்னிரு வயதில் ஆலயத்தில் - அன்று
அறிஞர்கள் புகழ்ந்தவரை - 2
கரங்களை விரித்தே கள்வனைப்போல்
கழுமரத்தினில் கண்டதனால்

2. திருமணப் பந்தியில் கனி இரசமே - அன்று
அருளிய திருமகனை - 2
குருதி சிந்தி கடற்காடியினை - இன்று
பருகிடக் கண்டதனால்
1136.வெண்பனிமேகம்நடுவினிலேநிலவாய் உலவும்பெண்அரசியே
வெண்பனிமேகம்நடுவினிலேநிலவாய் உலவும்பெண்அரசியே
புன்னகையில் என்னை அழைத்தாயே
அடைக்கலம் தந்து காத்தாயே
மாதரசி மாதாவே மாறாத நல்லுறவே
வாழ்க வாழ்க மாமரியே வாழ்க வாழ்கவே - 2

1. மலையென சூளும் துன்பமெல்லாம்
பனியென உருகும் உன்னருளால்
தளர்ந்திடும் இதயம் திடமாகிடுமே - 2
தாயே உன் ஆலய தரிசனத்தால் - 2

2. புல்லாங்குழலின் துளைகளிலே
புகுந்திடும் தென்றல் இசையாகும்
உன்னைச் சேர்ந்திடும் நெஞ்சங்களெல்லாம் - 2
உன்னதர் வாழும் இடமாகும் நிச்சயமே - 2
1137.ஜென்மப்பாவம் இல்லாமலே உற்பவித்த இராக்கினியே
ஜென்மப்பாவம் இல்லாமலே உற்பவித்த இராக்கினியே
நாங்கள் எல்லாம் உன் பதத்தை நாடிவந்தோம் நாயகியே
மரியே மரியே ஆதரிப்பாய் தோத்திரமே

1. பேய் மயக்கும் பாவவழி நின்று எம்மைக் காத்திடுவாய்
தூய வெண்லீலிமலர்போல் தோன்றினாயே பூமிதனில்
மரியே மரியே ஆதரிப்பாய் தோத்திரமே

2. மணிமுடி தாங்கி நிற்கும் மகிமையின் அரசியே
வானவரும் மானிடரும் வாழ்த்தி உம்மைப் போற்றுகின்றோம்
மரியே மரியே ஆதரிப்பாய் தோத்திரமே